மாநிலத்தில் ஜூலை 1ம் தேதி முதல் 300 யூனிட் இலவச மின்சாரம் – முதல்வரின் சூப்பரான அறிவிப்பு!

0
மாநிலத்தில் ஜூலை 1ம் தேதி முதல் 300 யூனிட் இலவச மின்சாரம் - முதல்வரின் சூப்பரான அறிவிப்பு!
மாநிலத்தில் ஜூலை 1ம் தேதி முதல் 300 யூனிட் இலவச மின்சாரம் - முதல்வரின் சூப்பரான அறிவிப்பு!
மாநிலத்தில் ஜூலை 1ம் தேதி முதல் 300 யூனிட் இலவச மின்சாரம் – முதல்வரின் சூப்பரான அறிவிப்பு!

இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அரசியல் கட்சியினர் அளித்த வாக்குறுதிகளை தற்போது ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகின்றனர். அதில் குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த கட்சியினர் தனது முக்கிய வாக்குறுதி ஒன்றை நிறைவேற்றியுள்ளது.

இலவச மின்சாரம்

இந்தியாவில் கடந்த டிசம்பர் மாதத்தில் கொரோனா பரவலின் தாக்கம் தென்னாப்பிரிக்காவில் உருவான ஓமைக்ரான் தொற்று காரணமாக அதிகரிக்க தொடங்கியது. அதனால் தொற்று அதிகம் பரவிய மாநிலங்களில் தேவைப்பட்டால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி கொள்ளலாம் என்று மத்திய அரசு பரிந்துரைத்தது. அதன்படி பல்வேறு மாநிலங்களில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதனால் கொரோனா பரவல் காரணமாக உத்தர பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் ஒத்தி வைக்கப்பட்டது.

தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

இதையடுத்து கொரோனா பரவலின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு தளர்வுகளை அளித்துள்ளது. மேலும் உத்தர பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதத்தில் நடைபெற்றது. இதில் குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில் பிப்ரவரி 14ம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கான முடிவுகள் மார்ச் 10ம் தேதி எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டன. அதன்படி தற்போது பஞ்சாபில் ஆம் ஆத்மி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. தற்போது பஞ்சாபின் முதல்வராக பக்வந்த் மான் பொறுப்பேற்றுள்ளார்.

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? அமைச்சரின் முக்கிய தகவல்!

இந்த நிலையில் பஞ்சாபின் முதல்வராக பக்வந்த் மான் தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறார். இதில் முக்கியமான வாக்குறுதியாக 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதனை வருகிற ஜூலை 1ம் தேதி முதல் அமல்படுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் மற்றொரு வாக்குறுதியான வீடு தேடி ரேஷன் பொருட்கள் என்ற திட்டத்தையும் அமல்படுத்தியுள்ளது. மேலும் இது போன்று டெல்லி அரசாங்கமும் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இங்கும் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!