பொது மக்களுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம்? முதல்வர் உத்தரவு!
குஜராத் சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதையொட்டி ஆட்சியை தக்கவைக்க பாஜகவும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ், ஆம்.ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் கடும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது தேர்தல் சுற்றுப் பயணத்தின் போது குஜராத் மாநிலம் சூரத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் முக்கிய வாக்குறுதி ஒன்றை அளித்துள்ளார்.
இலவச மின்சாரம்:
பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் மாநில முதல்வராக பகவத்ந்மான் செயல்பட்டு வருகிறார். இம்மாநிலத்திற்கு சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலின் போது ஆம் ஆத்மி ஆட்சிக்கு வரும் பட்சத்தில் ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முதல் வீடுகளுக்கு மாதம் ஒன்றுக்கு 300 யூனிட்டுகள் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் தெரிவித்து இருந்தது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த ஜூலை 1 முதல் இலவச மின்சாரம் வழங்குவற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Exams Daily Mobile App Download
இதை தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் தொடர்ந்து 20 ஆண்டுகளாக பாஜக கட்சியே ஆட்சியில் இருந்து வருகிறது. இந்நிலையில், இந்தாண்டு இறுதியில் குஜராத் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆட்சியை தக்கவைக்க பல கட்சிகளும் முனைப்பு காட்டி வருகின்றன. இதனை தொடர்ந்து குஜராத்திலும் தனது தேர்தல் வேட்டையை ஆம் ஆத்மி தொடங்கி நடத்தி வருகிறது.
TNUSRB போலீஸ் தேர்விற்கான பாடத்திட்டம் & தயாராகும் முறை – முழு விவரங்கள் இதோ!
இதன்படி குஜராத்துக்கு வருகை தந்துள்ள டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் இன்று சூரத் நகரில் மக்களிடையே கூட்டத்தில் பேசும்போது, அனைத்து உள்ளூர் நுகர்வோர்களுக்கும் நாங்கள் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவோம் என கூறி ஆச்சரியப்படுத்தி உள்ளார். இது தவிர, அனைத்து நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கும் 24×7 என்ற வகையில் மின்சார விநியோகம் கிடைக்க உறுதி செய்வோம். கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரையிலான நிலுவையிலுள்ள அனைத்து மின் கட்டண பில்களையும் தள்ளுபடி செய்வோம் என கூறியுள்ளார். அதாவது டெல்லியை தொடர்ந்து பஞ்சாபை கைப்பற்றிய ஆம் ஆத்மி கட்சி, தற்போது குஜராத் மீது கவனம் செலுத்தி வருகிறது என்று கூறலாம்.