அரசு சார்பில் 300 யூனிட் மின்சாரம் இலவசம் – தேர்தல் வாக்குறுதி!
பஞ்சாப் மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றால் மாநில மக்களுக்கு 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று ஆம் ஆத்மி கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் வாக்குறுதி அளித்துள்ளார்.
பஞ்சாப் தேர்தல்:
பஞ்சாப் மாநிலத்தில் வரும் 2022 பிப்ரவரி மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக தற்போது அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் செய்வோம் என்பதற்கான வாக்குறுதிகளை தெரிவித்து வருகின்றனர். தற்போது அந்த வகையில் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான கெஜ்ரிவால் அவர்கள் ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை தெரிவித்துள்ளார்.
தமிழில் ஆதார் அட்டை ஆன்லைனில் பெறுவது எப்படி? முழு விபரம் இதோ!
அதன்படி அவர் தெரிவித்ததாவது, பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தால் முதலில் 3 விஷயங்கள் அமல்படுத்தப்படும். அதன்படி முதலாவதாக அனைத்து வீடுகளுக்கும் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். இதனால் மாநிலத்தில் உள்ள 77 முதல் 80 சதவீத மக்கள் மின்சார கட்டணம் செலுத்தும் நிலை ஏற்படாது. மேலும் மாநிலத்தில் பலருக்கும் மின் கட்டணம் குறைவாகும். இரண்டாவதாக பழைய கட்டணங்கள் மற்றும் நிலுவையில் உள்ள கட்டணங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும்.
TN Job “FB Group” Join Now
இதனால் பழைய கட்டணங்களை யாரும் கட்ட தேவையில்லை. மேலும் துண்டிக்கப்பட்ட மின் இணைப்புகள் மீண்டும் வழங்கப்படும். மூன்றாவதாக மாநிலத்தில் 24 மணி நேரமும் மின்சார விநியோகம் செய்யப்படும். கடந்த 2013 ல் டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்த போது அதிக மின் கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஆனால் தற்போது டெல்லியில் குறைந்த விலையில் மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது. இதை பஞ்சாப்பிலும் செய்வோம் என்று வாக்குறுதி அளித்துள்ளார்.