திருப்பதி தரிசனம் செல்வோர் கவனத்திற்கு – ரூ.300 டிக்கெட் ஆன்லைனில் வெளியீடு!
தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதை தொடர்ந்து அனைத்து கோவில்களும் திறப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய இந்த மாதத்திற்கான டிக்கெட்டுகளை ஆன்லைனில் தேவஸ்தானம் வெளியிட உள்ளது.
தரிசன டிக்கெட்டுகள்:
நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டன. அதில் குறிப்பாக அனைத்து கோவில்களும் திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்த கட்டுப்பாடுகளின் காரணமாக கொரோனா பரவல் கட்டுக்குள் வரவழைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவில் திறக்கப்பட்டது. கொரோனா நோய் பரவல் காரணமாக கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு 300 ரூபாய் கட்டண சிறப்பு தரிசனம் முறை மட்டும் அமலில் இருந்தது.
மீண்டும் முழு ஊரடங்கு? இன்று மாலை பிரதமர் தலைமையில் ஆலோசனை! ஓமைக்ரான் பரவல் அச்சம்!
தற்போது இலவச தரிசன டிக்கெட்டுகளையும் வழங்கி வருகின்றனர். ஒரு நாளைக்கு நேரடியாக 5 ஆயிரம் டிக்கெட்களும், ஆன்லைன் மூலமாக 5 ஆயிரம் டிக்கெட்களும் மொத்தமாக 10 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட்டுகளை வழங்கி வருகிறது. அத்துடன் ரூ.300-க்கான டிக்கெட்டுகள் ஒரு நாளைக்கு 20 ஆயிரம் வழங்கி வருகிறது. இதற்கான முன்பதிவுகள் ஒவ்வொரு மாத கட்டண தரிசனத்திற்கும் முந்தைய மாதத்தின் இறுதியில் ஆன்லைனில் வெளியிடப்படும். அதன்படி இந்த மாதத்திற்கான டிக்கெட்டுகள் நாளை காலை 9 மணிக்கு திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படும்.
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – மொபைல் நம்பர் அப்டேட் செய்யும் முறைகள் இதோ!
ஒரு நாளைக்கு 20 ஆயிரம் டிக்கெட்டுகள் வீதம் 6 லட்சத்து 20 ஆயிரம் டிக்கெட்டுகள் வெளியிடப்படும். இந்த டிக்கெட் வெளியிட்ட சில நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்கப்பட்டு விடும். இதே போல் இலவச தரிசனத்திற்காக டிக்கெட்டுகளும் நாளை மறுநாள் காலை 9 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அத்துடன் ஒரு நாளைக்கு 5 ஆயிரம் டிக்கெட் வீதம் ஒரு லட்சத்து 55 ஆயிரம் டிக்கெட்டுகளை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இலவச தரிசன டிக்கெட்டுகளை வருகிற 31-ஆம் தேதி முதல் நேரடியாகவும் பெற்று கொள்ளலாம்.