அண்ணா பல்கலையில் மாதம் ரூ.30,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விண்ணப்பிக்கும் முறைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
வேலைவாய்ப்பு:
தமிழகத்தில் 2022ம் ஆண்டு தொடங்கியுள்ளதை அடுத்து அனைத்து துறைகளில் இருந்தும் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகள் வெளியான வண்ணம் உள்ளது. கொரோனா ஊரடங்கால் வேலைவாய்ப்பை இழந்தவர்கள், மீண்டும் வேலைவாய்ப்பை தேடி வருபவர்கள் தற்போது வெளியாகி வரும் வேலைவாய்ப்பு தகவல்களை பயன்படுத்தி மீண்டும் பணியில் சேர திட்டமிட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் – ஆசிரியர்கள் வலியுறுத்தல்!
தற்போது சென்னை அண்ணா பல்கலையில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் ள பிராஜெக்ட் அசோசியேட்-II மற்றும் தொழில்முறை உதவியாளர் II பதவிககான ஆட்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.
Project Associate II (Senior) & (Junior) :
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் /கல்வி நிறுவனங்களில், Ph.D. Environmental Science / M.E. டிகிரியில் Environmental Engineering / Environmental Management போன்ற பாடப்பிரிவுகளை தேர்வு செய்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். 2 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.இப்பதவிக்கு ரூ.30,000 ஊதியம் வழங்கப்படும்.
Project Associate – I :
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர், Civil Engineering பாடப்பிரிவில் B.E / B.Tech. அல்லது Chemistry / Biochemistry / Applied Chemistry / Environmental Science பாடப்பிரிவில் M. Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும். 2 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இப்பதவிக்கு – ரூ.22,000 ஊதியம் வழங்கப்படும்
TNPSC தேர்வெழுத தயாராகி வருவோர் கவனத்திற்கு – முக்கிய அறிவுறுத்தல்கள்!
Project Assistant II
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர், Computer Science பாடப்பிரிவில் B.Com. / B.Sc. முடித்திருக்க வேண்டும்.இப்பதவிக்கு ரூ.18,000 ஊதியம் வழங்கப்படும்.
Professional Assistant III
விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர், Civil Engineering / Mechanical Engineering துறைகளில் Diploma ஆகிய பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் .இப்பதவிக்கு ரூ.16,000 ஊதியம் வழங்கப்படும்.
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர் அப்பணியில் 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அனுபவம் வாய்ந்த விண்ணப்பதாரருக்கு முன்னுரிமை வழங்கப்படும். விண்ணப்பங்களை தயார் செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ ஜன. 24 ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.