HCL நிறுவனத்தில் 30,000 பேருக்கு வேலைவாய்ப்பு – புதிய தகவல்!
முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான HCL, ஒவ்வொரு ஆண்டும் 40 முதல் 50% கூடுதல் பணியாளர்களை பணியமர்த்தி வரும் நிலையில் இந்த நிதியாண்டிலும் 30,000 ஊழியர்களை பணியமர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளது.
புதிய பணியாளர்கள்
இந்தியாவின் முன்னணி தகவல் தொடர்பு நிறுவனமான இன்போசிஸ், டாடா உள்ளிட்டவை பல புதிய பணியாளர்களை பணியமர்த்தி வருகிறது. அந்த வகையில் தற்பொழுது HCL நிறுவனமும் புதிய ஊழியர்களை பணியில் அமர்த்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது தொழில்நுட்ப சேவை மற்றும் விநியோகம் போன்றவைகள் விரிவடைவதால், இந்த நிதியாண்டில் 30,000 புதியவர்களை பணியமர்த்த வாய்ப்புள்ளதாக HCL நிறுவனத்தின் தலைமை மனிதவள அதிகாரி வி.வி அப்பராவ் தெரிவித்துள்ளார்.
இன்று முதல் 10, 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – மாநில அரசு நடவடிக்கை!
முன்னதாக இந்நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் 40% முதல் 50% க்கும் அதிகமான புதிய ஊழியர்களை பணியமர்த்தி வருவதாகவும், இந்த எண்ணிக்கையை தற்பொழுதுள்ள நிதியாண்டில் 30,000 ஆக அதிகரிப்பதாகவும் கூறியுள்ளார். அந்த வகையில் கடந்த 2020 ஆம் ஆண்டு, HCL நிறுவனம் 14,000 புதியவர்களை வேலைக்கு அமர்த்தியது. மேலும் இது 2021 ஆம் ஆண்டில் 20,000 முதல் 22,000 புதியவர்களை பணியில் அமர்த்த ஆலோசித்து வருகிறது. இதுவரை HCL நிறுவனத்தில் சுமார் 1.76 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர்.
TN Job “FB Group” Join Now
தற்போது இந்நிறுவனத்தில் புதிய பணியமர்த்தல் எண்ணிக்கையானது சுமார் 35 முதல் 65% இருப்பதாகவும் இந்த எண்ணிக்கை இன்னும் இரண்டு ஆண்டுகளில் 70% அதிகரிக்க விரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நிறுவனம் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (IIT) போன்ற புகழ்பெற்ற நிறுவனங்களிடமிருந்து 206 பேரை கடந்த நிதியாண்டில் பணியமர்த்தியுள்ளது. அந்த வரிசையில் HCL நிறுவனம் IIM ல் இருந்து புதிய பணியமர்த்தலை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும், மேலும் சில சிறந்த 200 கல்லூரிகளில் இருந்து மேற்கொள்ள திட்டமிட்டு வருவதாகவும் அப்பராவ் தெரிவித்துள்ளார்.