TNPSC வேலைவாய்ப்பு பெற தயாராகி வருவோர் கவனத்திற்கு – நடப்பாண்டில் 30+ தேர்வுகள்!
தமிழகத்தில் TNPSC குரூப் 2 மற்றும் 2A ஆகிய தேர்வுகளுக்கு அறிவிப்பு இம்மாதம் வெளியாகும் என்று TNPSC தேர்வாணைய தலைவர் கூறியுள்ளார். அறிவிப்பு வெளியாகி 75 நாட்களுக்குள் தேர்வு நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC:
தமிழகத்தில் அரசு பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணிகள் தேர்வாணையம் மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு அதன் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். 2022ம் ஆண்டு TNPSC தேர்வுகளை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் எழுத கூடிய குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகள் குறித்த அறிவிப்பு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் வெளியாகும் என்று TNPSC தேர்வாணையம் கடந்த வருட இறுதியில் தெரிவித்தது. இந்த நிலையில் தற்போது பிப்ரவரி மாதம் நடைபெற்று வருவதால் குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்று தேர்வர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
பிப்.14 (திங்கட்கிழமை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!
இந்த நிலையில் குருப் 2 மற்றும் 2 ஏ தேர்வு குறித்த அறிவிப்பு இம்மாதம் வெளியாகும் என்று அரசு பணிகள் தேர்வாணைய தலைவர் தெரிவித்துள்ளார். அறிவிப்பு வெளியாகி 75 நாட்களுக்குள் தேர்வு நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார். அதனை தொடர்ந்து அடுத்த மாதம் குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 2022ம் ஆண்டு முதல் TNPSC தேர்வு முறைகளில் பல்வேறு மாற்றங்களும் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழ் மொழிக்கும் தமிழ் மக்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் TNPSC தேர்வுகளில் தமிழ் மொழி தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 10ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் கவனத்திற்கு – தேசிய திறனாய்வு தேர்வு விடைக்குறிப்பு!
இந்த தமிழ் மொழி தேர்வில் 40% மதிப்பெண்கள் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 40-க்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெற்றால் தான் தொடர்ந்து அவர்கள் எழுதிய அனைத்து விடைகளும் மதிப்பீடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தாண்டு 32 வகையான தேர்வுகள் நடத்தப்படும் என்றும் தேர்வு அறிவிப்பு வெளியாகி 75 நாட்களுக்குள் தேர்வு நடத்தப்படும் என்றும் தேர்வாணைய தலைவர் தகவல் வெளியிட்டுள்ளார். ஏற்கனவே தமிழ் மொழி சேர்க்கப்பட்ட பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.