மத்திய அரசின் ஊழியர்களுக்கு 3 போனஸ் – வெளியான சூப்பர் தகவல்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு மூன்று போனஸ் அளிக்கும் வகையில் மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
மூன்று போனஸ்:
மத்திய அரசின் கீழ் பல்வேறு துறைகள் செயல்பட்டு வருகின்றன. இத்துறைகளில் சுமார் 6 கோடி அளவிலான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவ்வாறு மத்திய அரசில் பணியாற்றி வரும் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி, வீட்டு வாடகை படி, பயண கட்டண படி மற்றும் குழந்தைகள் கல்வி கட்டண படி என பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை அகவிலைப்படி 17% மும், வீட்டு வாடகை படி 24% மும் வழங்கப்பட்டு வந்தது. அதனை தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்தப்பட்டது. மேலும் வீட்டு வாடகைப் படி 24 சதவீதத்தில் இருந்து 27 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு ஆணை வெளியிட்டது.
தமிழகத்தின் ‘இந்த’ 14 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்துவதாக அரசு அறிவித்திருந்தது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட நிதி நெருக்கடியின் காரணமாக அந்த திட்டம் அமல்படுத்தப்படவில்லை. கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கு அகவிலைப்படி நிலுவையில் இருந்து வருகிறது. கடந்த 2020-2021 ஆம் ஆண்டுக்கான பிஎப் வட்டி செலுத்தப்படாமல் நிலுவையில் இருந்து வருகிறது. தற்போது நாடு முழுவதும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இன்னும் மத்திய அரசு நிலுவையில் உள்ள தொகையை அளிக்குமா என்ற பயம் ஊழியர்கள் மத்தியில் இதுவரை நிலவி வந்தது. இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏற்கனவே அளிக்கப்பட்ட அகவிலைப்படி 28% இருந்து 3% உயர்த்தி 31% ஆக வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக 10ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு, இன்னும் 2 நாள் தான் – முக்கிய அறிவிப்பு!
அது மட்டுமின்றி நிலுவையில் உள்ள ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கான அகவிலைப்படி கூடிய விரைவில் வழங்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அரசு பணியில் இருப்போர் மற்றும் ஓய்வு பெற்று பென்ஷன் வாங்குவோருக்கு பிஎப் வட்டி அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இத்தகைய மூன்று செயல்பாடுகளும் தீபாவளிக்கு முன்னரே செயல்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் இத்தகைய அறிவிப்பினை மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.