மாதம் ரூ.3,000 வழங்கும் PM கிசான் யோஜனா ஓய்வூதிய திட்டம் – முக்கிய தகவல்கள் இதோ!

0
மாதம் ரூ.3,000 வழங்கும் PM கிசான் யோஜனா ஓய்வூதிய திட்டம் - முக்கிய தகவல்கள் இதோ!
மாதம் ரூ.3,000 வழங்கும் PM கிசான் யோஜனா ஓய்வூதிய திட்டம் - முக்கிய தகவல்கள் இதோ!
மாதம் ரூ.3,000 வழங்கும் PM கிசான் யோஜனா ஓய்வூதிய திட்டம் – முக்கிய தகவல்கள் இதோ!

பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்தன் யோஜனா திட்டத்தின் கீழ் நாட்டின் அனைத்து சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கும் அவர்களின் முதுமை காலத்தில் உதவியாக அரசால் ஓய்வூதியம் வழங்கப்படும். இந்த திட்டம் மே 31, 2019 அன்று தொடங்கப்பட்டது.

ஓய்வூதிய திட்டம்:

விவசாயிகளுக்கு உதவ மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவற்றில் PM-கிசான் சம்மன் நிதி யோஜனா மற்றும் PM ஷ்ரம் யோகி மான்தன் யோஜனா ஆகியவை மிகவும் பிரபலமானவை ஆகும். பிரதான் மந்திரி கிசான் சம்மான் யோஜனா திட்டத்தின் கீழ் நாட்டின் விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 6000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மந்தன் யோஜனா என்பது விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டமாகும். இதன் கீழ் 60 ஆண்டுகளுக்குப் பிறகு பயனாளிக்கு ஆண்டுக்கு ரூ.36,000 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

கொரோனா பரவலால் மே 28 வரை முழு ஊரடங்கு – திடீர் அறிவிப்பால் பீதியில் மக்கள்!

கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகள் நேரடியாக ஷ்ரம் யோகி மான்தன் யோஜனா திட்டத்தில் எந்த ஆவணமும் இல்லாமல் தங்களை பதிவு செய்து கொள்ளலாம். பிரதான் மந்திரி மன்தன் யோஜனா திட்டத்தின் கீழ், நாட்டின் அனைத்து சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கும் முதுமையில் வாழ அரசால் ஓய்வூதியம் வழங்கப்படும். இந்தத் திட்டம் மே 31, 2019 அன்று தொடங்கப்பட்டது. பிரதம மந்திரி மன்தன் யோஜனா திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு 60 வயது நிறைவடைந்தவுடன் ஒவ்வொரு மாதமும் 3000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் விவசாயி இறந்தால் பயனாளியின் மனைவிக்கு மாதம் ரூ.1500 வழங்கப்படும்.

பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்தன் யோஜனா திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் வயது 18 வயதிலிருந்து 40 வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்த பிறகு, விவசாயி ஒவ்வொரு மாதமும் பிரீமியத்தை டெபாசிட் செய்ய வேண்டும். 18 வயது நிரம்பிய விவசாயிகளுக்கு மாதம் 55 ரூபாய் பிரீமியம் செலுத்த வேண்டும். அதேசமயம், 40 வயது நிரம்பிய விவசாயி 200 ரூபாய் பிரீமியமாக செலுத்த வேண்டும். இதில் 60 வயது நிறைவடைந்த பின், மாதந்தோறும் 3,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 50 சதவீத பிரீமியத்தை விவசாயிகளும், மீதமுள்ள 50 சதவீத பிரீமியத்தை அரசும் செலுத்துகிறது.

Exams Daily Mobile App Download

இந்த திட்டத்தின் கீழ் ஆயுள் காப்பீட்டுக் கழகம் நோடல் ஏஜென்சியாக செயல்படுகிறது. ஓய்வூதிய திட்டத்திற்காக ஒவ்வொரு மாதமும் செலுத்தப்படும் பிரீமியமும் சம்மன் நிதியின் கீழ் வரும் அரசு உதவியில் இருந்து பிடித்தம் செய்யப்படும். PM ஷ்ரம் யோகி மான்தன் யோஜனாவில் பதிவு செய்ய, நீங்கள் அருகிலுள்ள பொது சேவை மையத்திற்கு (CSC) சென்று பதிவு செய்து கொள்ளலாம். கிசான் மாந்தன்  யோஜனாவின் https://maandhan.in/shramyogi என்ற இணையதளத்திற்குச் சென்று பதிவு செய்யலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!