PM கிசான் பயனர்கள் கவனத்திற்கு – மாதந்தோறும் 3 ஆயிரம் ஓய்வூதியம்! முழு விவரம் இதோ!
மத்திய அரசின் PM கிசான் திட்டத்தின் கீழ் கணக்கு வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ஒவ்வொரு மாதமும் 3 ஆயிரம் ரூபாய் வழங்கும் ஓய்வூதிய சேவைகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.
PM கிசான் ஓய்வூதியம்
நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு உதவும் வகையில் மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் கீழ், ஒவ்வொரு ஆண்டும் நிதியுதவி வழங்குவதோடு மட்டுமல்லாமல் விவசாயிகளுக்கு ஓய்வூதிய திட்டமும் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பிரதம மந்திரி கிசான் சம்மனா நிதி திட்டத்தின் கீழ், அரசாங்கம் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் நேரடியாக 6,000 ரூபாய் பணத்தை அவர்களது வங்கி கணக்கில் செலுத்துகிறது. அதே நேரத்தில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் கிசான் மன்தன் யோஜனா மூலம் அவர்களுக்கு ஓய்வூதியத்தையும் வழங்குகிறது.
1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – கோடை விடுமுறை குறித்த மாநில அரசுகளின் அறிவிப்புகள்!
பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் இப்போது பலனையும் விவசாயிகள் பெறலாம். இந்த திட்டத்தின் கீழ் விவசாயி ஒருவர் கணக்கு வைத்திருந்தால் எந்த ஆவணமும் இல்லாமல், விவசாயிகளுக்கான ஓய்வூதியத் திட்டமான PM கிஷான் போரட்டலில் நேரடியாகப் பதிவு செய்யப்படுவார்கள். மேலும், 60 ஆண்டுகளுக்கு பின் ஒவ்வொரு விவசாயிகளுக்கும் மாதந்தோறும் 3 ஆயிரம் ரூபாய் என்ற அடிப்படையில் சுமார் 36 ஆயிரம் ரூபாய் ஆண்டு ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. பிரதமர் கிசான் மந்தன் யோஜனா என்பது சிறு விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டமாகும்.
Exams Daily Mobile App Download
இத்திட்டத்தில், 18 முதல் 40 வயதுக்கு உட்பட்ட எந்த விவசாயியும் தங்களை பதிவு செய்து கொள்ளலாம். இதற்காக அவர்கள் மாதாந்திர பங்களிப்பை செலுத்த வேண்டும். இந்த பங்களிப்பு வயதுக்கு ஏற்ப ரூ.55 முதல் ரூ.200 வரை இருக்கலாம். இந்த பங்களிப்பு தொகை, ஒவ்வொரு விவசாயிகளும் 60 ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வூதியமாக கொடுக்கப்படுகிறது. இது குறித்த கூடுதல் தகவல்களை பயனர்கள் http://www.pmkisan.gov.in என்றபிரதமர் கிசான் சம்மன் நிதியின் இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.