மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் ரூ.3000 உதவித்தொகையுடன் சைவ பயிற்சி – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் ரூ.3000 உதவித்தொகையுடன் சைவ பயிற்சி - விண்ணப்பங்கள் வரவேற்பு!
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் ரூ.3000 உதவித்தொகையுடன் சைவ பயிற்சி - விண்ணப்பங்கள் வரவேற்பு!
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் ரூ.3000 உதவித்தொகையுடன் சைவ பயிற்சி – விண்ணப்பங்கள் வரவேற்பு!

மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் ஓராண்டு சைவ பயிற்சி சான்றிதழ் படிப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி காலத்தில் 3000 ரூபாய் உதவித்தொகையும் அளிக்கப்படுகிறது.

சைவ பயிற்சி:

தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு இந்து சமய அறநிலையத் துறையில் பல்வேறு புதுமைகளை கொண்டு வந்துள்ளது. கோவில்களில் மொட்டை அடிக்க கட்டணம் இல்லை. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், தமிழில் அர்ச்சனை போன்ற திட்டங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் அரசு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த பிறகு நடைபெற்ற மானிய கோரிக்கை விவாதத்தின் போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கோவிலுக்கு அர்ச்சகர்களை உருவாக்கும் நோக்கில் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் அர்ச்சகர் பயிற்சி பள்ளிகள் உருவாக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – அதிரடி அறிவிப்பு வெளியீடு!

அதன் படி திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் வைணவ பயிற்சி பள்ளி தொடங்கப்பட்டுள்ளது. இப்பயிற்சிகான விண்ணப்பங்கள் வரவேற்க்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து தற்போது மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் ஓராண்டு சைவ பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளது. இப்பயிற்சி பெற விருப்பமுள்ளவர்கள் திருக்கோயிலின் www.maduraimeenakshi.org என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

மத்திய உள்துறை அமைச்சக வேலைவாய்ப்பு – தேர்வு, நேர்காணல் கிடையாது..!

மேலும் விண்ணப்பதாரர்கள் இந்துக்களாக இருக்க வேண்டும். இவர்கள் சைவ கோட்பாட்டினை கடைபிடிப்பவராக இருக்க வேண்டும் போன்ற நிபந்தனைகள் உண்டு. கல்வித்தகுதி 8ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சைவ பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பயிற்சி காலத்தில் அரசு சார்பாக மாதம் 3 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையும் வழங்கப்படும். இப்பயிற்சி பெறும் மாணவர்கள் பயிற்சி காலம் முழுவதும் பயிற்சி நிலையத்தில் தங்கி பயிற்சி பெற வேண்டும். இம்மாணவர்களுக்கு இலவசமாக உணவு, உடை, இருப்பிடம் வழங்கப்படும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!