அரசு ஓய்வூதியதாரர்களுக்கு 3% அகவிலைப்படி (DR) உயர்வு – ஜனவரி முதல் அமல்!
ஜம்மு காஷ்மீர் அரசாங்கத்தை சேர்ந்த ஓய்வூதியதாரர்களுக்கு 3% அகவிலைப்படி (DA) உயர்வு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தொகை ஜனவரி 2022 முதல் அமலுக்கு வரும் என தகவல்கள் பெறப்பட்டுள்ளது.
அகவிலைப்படி உயர்வு
சமீபத்தில் மத்திய அரசுத்துறையை சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி (DA) தொகை 34% ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பால் பல லட்சக்கணக்கான ஊழியர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இப்போது மத்திய அரசு ஊழியர்களுக்கான DA அதிகரிப்புக்கு பிறகு, ஒரு சில மாநிலங்களை சேர்ந்த அரசு ஊழியர்களுக்கும் DA தொகை உயர்த்தி அறிவிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தற்போது ஜனவரி 2, 2022 முதல் ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி ஜம்மு காஷ்மீர் அரசாங்கம் இன்று (ஏப்ரல்.20) அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இது குறித்த பொது நிர்வாகத் துறையின் உத்தரவின்படி, புதிய டிஏ விகிதம் அடிப்படை ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியத்தில் தற்போதுள்ள 32 சதவீதத்திற்கு பதிலாக 34 சதவீதமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் திருத்தப்பட்ட DA கணக்கின் மீதான நிலுவைத் தொகை ஊழியர்களுக்கு பணமாக செலுத்தப்படும் என்றும் ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு ஓய்வூதியத்தின் ஒரு பகுதியாக இருக்கும் என்றும் உத்தரவில் விளக்கம் கொடுக்கப்பட்டிருந்தது. அதே நேரத்தில் 50 பைசாவின் பின்னங்களை உள்ளடக்கிய அகவிலைப்படி (DA) தொகை அடுத்த உயர் ரூபாய்க்கு ரவுண்ட் ஆஃப் செய்யப்படும் என்றும் 50 பைசாவுக்கு குறைவான பின்னங்கள் புறக்கணிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.