தமிழக அரசு ஓய்வூதியதாரர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி – வலுக்கும் போராட்டம்!
தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியா் சங்கத்தின் சார்பாக தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரியில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல், அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட சில கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது.
பழைய ஓய்வூதியத் திட்டம்:
மத்திய அரசு ஊழியர்களுக்கு கொரோனா காலகட்டத்தில் மட்டுமே 28 சதவீதமாக இருந்த அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டு 31 சதவீதமாக இருந்தது. தற்போது மீண்டும் அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களை போல தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்க வேண்டும் என அவ்வப்போது கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது.
TNUSRB SI தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவரா நீங்கள்? குறைந்த கட்டணத்தில் பயிற்சி வகுப்புகள்!
இதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் கடந்த 2009ம் ஆண்டிற்கு பிறகு அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆனால் இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் பல பாதகமான அம்சங்கள் இடம் பெற்ற காரணத்தினால் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது. ராஜஸ்தான், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் அமலுக்கு வந்துவிட்டது. இந்த மாநிலங்களை தொடர்ந்து தமிழகத்திலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியா் சங்கத்தின் சார்பாக கடந்த செவ்வாய்க்கிழமை அன்று தர்மபுரி, கிருஷ்ணகிரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதாவது இந்த கூட்டத்தில் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் மருத்துவ செலவை திரும்ப பெற அளிக்கப்பட்ட மனுக்களுக்கு உடனடியாக தீர்வு அளிக்க வேண்டும் எனவும், ஓய்வூதிய வயதை 80-இலிருந்து 70-ஆக குறைக்க வேண்டும் எனவும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனவும், 3% அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது.