மாநில அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – 3 % அகவிலைப்படி (DA) உயர்வு!
மகாராஷ்டிராவில் அரசு ஊழியர்களுக்கு 7 வது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி ஜூன் மாதம் அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று கூறப்படுகிறது. இந்த தகவல் வந்ததை அடுத்து ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அகவிலைப்படி:
இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த 2021ம் ஆண்டு ஊரடங்கு காலத்தில் நிலவிய கொரோனா பெருந்தொற்றின் போது மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படவில்லை. அதன் பிறகு கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வந்த பிறகு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அளிப்பது பரிசீலிக்கப்பட்டு கடந்த 2021 ஜூலை மாதம் 2 கட்டங்களாக அகவிலைப்படி உயர்த்தப்பட்டு 31% ஆக அதிகரிக்கப்பட்டது. இந்த நிலையில் 2022ம் ஆண்டு முதல் மேலும் 3% அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று தகவல்கள் வெளியானது. மத்திய அமைச்சரவையின் ஒப்புதலின்படி 3% அகவிலைப்படி உயர்த்தப்பட்டு தற்போது 34% ஆக அகவிலைப்படி உயர்த்தப்பட்டது.
தமிழகத்தில் ஜூன் 7 மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்சார வாரியம் அறிவிப்பு!
2022, ஜனவரி 1 முன் தேதியிட்டு இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. சுமார் 47.68 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு பயன் பெற்று வருகின்றனர். இந்த நிலையில் மீண்டும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப் போவதாக தகவல்கள் வந்துள்ளது. அதனை தொடர்ந்து மகாராஷ்டிரா மாநில அரசு ஊழியர்களுக்கு 7ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டு 34 சதவீதமாக உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
தனது ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 5 தவணைகளாக உயர்த்தியது. இதில் ஏற்கெனவே இரண்டு தவணைகள் வழங்கப்பட்டுவிட்டது. மூன்றாவது தவணையை வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. தன் மூலம் சுமார் 17 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அகவிலைப்படியை தொடர்ந்து ஊழியர்களுக்கு சம்பள உயர்வு ரூ.30,000 முதல் ரூ.40,000 வரையில் இருக்கும் என்று கணக்கிடப்படுகிறது. குரூப் C பிரிவில் சம்பளம் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரையிலும் சம்பளம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.