தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கான 3% அகவிலைப்படி – அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் கடந்த ஜனவரி மாதம் முதல் 31% அகவிலைப்படியை பெற்று வருகின்றனர். ஆனால் தங்களுக்கு மீண்டும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு மீண்டும் அகவிலைப்படியை அரசு உயர்த்தி வழங்கியுள்ளது.
அகவிலைப்படி உயர்வு
மத்திய அரசு ஊழியர்களுக்கு கொரோனா காரணமாக அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாமல் இருந்தது. இதையடுத்து கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூலையில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. அதன்படி மத்திய அரசு ஊழியர்கள் 31% அகவிலைப்படியை பெற்று வந்தனர். இதே போல தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி கடந்த ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் அகவிலைப்படி 17 சதவிகிதத்தில் இருந்து 31 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழக அரசு துறையில் 5ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!
இது ஆறு மாத காலத்திற்கு பிறகு தாமதமாக வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து மத்திய அரசு ஊழியர்கள் கடந்த ஜனவரி மாதத்தில் மீண்டும் 3% அகவிலைப்படி உயர்வு பெற்று 34% அகவிலைப்படியை பெற்று வந்தனர். அதனால் தமிழக அரசு ஊழியர்களுக்கும் மீண்டும் 3 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என்று பல்வேறு இடங்களில் ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பான அரசாணையில், தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு 31% அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு மீண்டும் 3% அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஊழியர்கள் 34% அகவிலைப்படியை பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. அத்துடன் தமிழக அரசு கடந்த ஜனவரி மாதம் முதல் கடந்த ஜூன் மாதம் வரை 31% அகவிலைப்படியை பெற்று வந்தனர். தற்போது மீண்டும் அறிவித்த 3% அகவிலைப்படி உயர்வு ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
பணிபுரியும் அரசு ஊழியர்கள்
ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் எல்லோருக்கும்.
அகவிலைப்படி ஆணைகளை ஒரேநேரத்தில் வெளியிட வேண்டும்.