தமிழகத்தில் விவசாய நகை கடன்களுக்கு 3 சதவீதம் மானியம் – நபார்டு வங்கி அறிவிப்பு!
கொரோனா பேரிடர் காலத்திலும் விவசாய நகை கடன்களை முறையாக செலுத்தியவர்களுக்கு 3 சதவீதம் மானியம் வழங்கப்படும் என நபார்டு வங்கி அறிவித்துள்ளது. அந்த தொகை இம்மாத இறுதிக்குள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாய கடன்களுக்கு மானியம்
இந்தியாவின் முதுகெலும்பாக கருதப்படும் விவசாய தொழில் செய்பவர்களுக்கு மத்திய அரசு பல நலத்திட்ட உதவிகளை அளித்து வருகிறது. அந்த வகையில் விவசாய பணிகளை மேற்கொள்ள வங்கிகளிலும் குறைந்த வட்டிக்கு கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் படி 7 சதவீத வட்டியில் விவசாயிகளுக்கு நகைக்கடன் வழங்கப்படுகிறது. இதில் கடன் தொகையை முறையாக திரும்ப செலுத்துபவர்களுக்கு மத்திய அரசு மானியம் கொடுக்கிறது.
அனைத்து கடைகளும் மதியம் 1 மணி வரை மட்டுமே திறப்பு – நகராட்சி கமிஷனர் அறிவிப்பு!!
இந்த விவசாய நகை கடனுக்கான வட்டி விகிதத்தில், மத்திய அரசு 5 சதவீத வட்டி தொகையை வங்கிகளுக்கு வழங்குகிறது. ஆனால் கடந்த 2019 ஆம் ஆண்டு பட்ஜெட் அறிவிப்பின் போது அதற்கான நிதி ஒதுக்கப்படவில்லை. இதனால் விவசாயிகளின் நகை கடன்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானிய தொகை 2019 ஆம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டது. மேலும் கொரோனா பரவல் காரணமாக நகைக்கடன்களை செலுத்த முடியாமல் பல விவசாயிகள் திணறி வருகின்றனர்.
TN Job “FB Group” Join Now
இந்த நிலையில் கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் வரும் ஜூன் 30 ஆம் தேதி வரை, விவசாய நகை கடன்களுக்கான 7 சதவீத வட்டியில், 3 சதவீதம் மானியம் வழங்கப்படும் என அறிவித்துள்ள நபார்டு வங்கி அதற்கான சுற்றறிக்கையையும் அனைத்து வங்கிகளுக்கும் அனுப்பியுள்ளது. அந்த வகையில் விவசாய நகை கடன்களை முறையாக செலுத்தியவர்களுக்கு 3 சதவீத மானியத்தொகை அவர்களது வங்கி கணக்கிற்கு இம்மாத இறுதிக்குள் வரவு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.