மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு – எப்போது கிடைக்கும்? முழு விவரம் இதோ!
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு உயர்த்தப்பட்ட DA மற்றும் DR தொகை விரைவில் வழங்கப்படும் என நிதி அமைச்சகம் அறிவித்துள்ள நிலையில், இதன் மூலம் யார் பயனடைவார்கள் என்ற விவரங்களை இப்பதிவில் காண்போம்.
DR தொகை
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கடந்த மாதம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி (DA) தொகையை 3 சதவீதம் உயர்த்த முடிவு செய்தது. இதையடுத்து, அரசு ஊழியர்களின் அகவிலைப்படி தொகை 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக அதிகரித்தது. இந்த தொகை ஊழியரின் அடிப்படை சம்பளத்தில் கணக்கிடப்படுகிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். இப்போது அதிகரித்து வரும் பணவீக்க விகிதத்தில் இருந்து ஊழியர்களுக்கு நிவாரணம் அளிக்க, அரசு இந்த உதவித்தொகையை அதிகரிக்கிறது.
அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் மே 2 முதல் ஜூன் 13 வரை கோடை விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!
இதேபோல், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் DR தொகையை அரசு 3% உயர்த்தி இருக்கிறது. இந்த அதிகரிப்பின் மூலம் நாட்டில் உள்ள சுமார் 47.68 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு பணவீக்கத்திலிருந்து நிவாரணம் வழங்குவதற்காக உயர்த்தப்பட்ட அகவிலைப்படி தொகை ஜனவரி முதல் கணக்கிடப்படும் என்று நிதி அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன் படி விரைவில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒவ்வொரு மாதமும் பெறப்பட்ட தொகை வழங்கப்படும் என்றும் முந்தைய மாத நிலுவைத் தொகையும் வழங்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
DR உயர்வு யாருக்கெல்லாம் பலன் அளிக்கும்?
- மத்திய துறைகள் அல்லது நிறுவனங்களில் இருந்து ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு DR வடிவில் ஓய்வூதியம் அதிகரிக்கப்படும்.
- ஓய்வு பெற்ற ஊழியர்களும் ஆயுதப்படையின் சேவையின் மூலம் பலன்களை பெறுவார்கள்.
- அகில இந்திய சேவை ஓய்வூதியர்களும் இதில் பங்கேற்பார்கள்.
- ரயில்வே ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பலன்களைப் பெறுவார்கள்.
- தற்காலிக ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்களுக்கும் DA வழங்கப்படும்.
- பர்மா (மியான்மர்) மற்றும் பாகிஸ்தானில் இருந்து இடம்பெயர்ந்த அரசு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் கூடுதல் DA வழங்கப்படும்.