மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% DA மற்றும் DR உயர்வுடன் கூடுதல் சலுகைகள் – முழு விவரம்!
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான DA மற்றும் DR தொகையை 3%மாக உயர்த்த அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதற்கு முன்னதாக அரசு ஊழியர்கள் பெறும் 5 விதமான கூடுதல் சலுகைகள் குறித்த விளக்கங்கள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன.
கூடுதல் சலுகை
மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டு வழங்கப்பட இருக்கும் அகவிலைப்படி உயர்வு மூலம் சில கூடுதல் சலுகைகளும் கொடுக்கப்பட இருப்பதால், அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரும் தொகை காத்திருக்கிறது. ஏனென்றால் கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான DA மற்றும் DR தொகை 3 தவணையுடன் சேர்த்து மொத்தமாக கொடுக்கப்பட இருக்கிறது. இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்கள் சுமார் 28% DA உயர்வை ஜூலை மாத தவணையுடன் பெற உள்ளனர்.
தமிழகத்தில் ஒரு லட்சம் புதிய மின் இணைப்புகள் – முதல்வர் தொடங்கி வைப்பு!!
இந்த தொகையுடன் வரவுள்ள பண்டிகை கால சலுகையாக, மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடுதலாக 3% DA தொகையை அளிக்கவும் அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான DA மற்றும் DR தொகை 31% மாக அதிகரிக்க இருக்கிறது. இப்போது அரசு ஊழியர்கள் பெறும் 3% DA உயர்வுக்கு முன்பாக 5 வகையான கூடுதல் பலன்களும் அவர்களுக்கு கொடுக்கப்பட இருக்கிறது. அந்த வகையில் முதலாவதாக மத்திய அரசு ஊழியர்களின் குடும்ப ஓய்வூதியத்துக்கான அடிப்படை தொகை ரூ.45,000 முதல் 1.25 லட்சமாக உயர்வடைய உள்ளது.
சென்னை: அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – இன்றைய நிலவரம்!
அதாவது, மரணமடைந்த அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு உதவும் நோக்கத்தில் இந்த செயல்பாடுகளை மத்திய அரசு முன்னெடுக்க இருக்கிறது. மேலும் மத்திய அரசு ஊழியர்களுக்கு வீட்டு கொடுப்பனவுக்கான கடன்கள், குறிப்பிட்ட வட்டியுடன் வழங்கப்பட இருக்கிறது. இது தவிர ஓய்வூதிய ஸ்லிப் இனி பயனர்களுக்கு SMS, வாட்ஸ்அப் மற்றும் மெயில் வழியாக அனுப்பப்பட இருக்கிறது. தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான DA மற்றும் DR உயர்வுடன், HRA சுமார் 25% க்கு மேல் அதிகரிக்கப்பட இருக்கிறது என தகவல்கள் வெளியாகியுள்ளது.