IND vs ENG 3வது டெஸ்ட் போட்டி – 3 இந்திய வீரர்களுக்கு வாய்ப்பு? வெளியான தகவல்!
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் 3 இந்திய வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இது குறித்த விபரங்களை இப்பதிவில் காணலாம்.
டெஸ்ட் போட்டி:
இந்தியா – இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை நடைபெறவுள்ளது. இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் போட்டி டிரா ஆனதை, தொடர்ந்து 2வது போட்டியானது லார்ட்ஸில் நடைபெற்றது. இந்த போட்டியில் பும்ரா – ஷமி ஆகியோரின் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறப்பாக பங்காற்றியதால் 2வது டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்றது.
தமிழகத்தில் சுற்றுலா தலங்கள் திறப்பு – கொடைக்கானலில் குவியும் மக்கள்!
டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக சேதேஷ்வர் புஜாரா 206 பந்துகளில் 45 ரன்கள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ரன் எடுக்க வேண்டிய பந்துகளில் கூட ரன்கள் எடுக்கும் முயற்சியில் புஜாரா ஈடுபடவில்லை என பல்வேறு புகார்கள் எழுந்துள்ள நிலையில் அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் டெஸ்ட் அணியில் நுழைவது உறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
TN Job “FB Group” Join Now
லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி அபார வெற்றி அடைந்திருந்தாலும் அதில் ஜடேஜாவின் பங்கு குறைவாக இருந்தது. இரண்டாவது இன்னிங்ஸில், ஜடேஜா 3 ரன்களில் அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக 3வது டெஸ்ட் போட்டியில் ஜடேஜாவுக்கு பதிலாக அஸ்வின் சேர்க்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி வருகிறது.
இரண்டாவது டெஸ்டில் 5 விக்கெட்டுகளுடன் இஷாந்த் சர்மா தனது ஆட்டத்தை சிறப்பாக ஆடினார். இருப்பினும் முதல் டெஸ்ட்க்கு பிறகு காயமடைந்த ஷர்துல் தாக்கூர் மூன்றாவது டெஸ்டில் விளையாட தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் காரணமாக ஷர்துல் தாக்கூர் அணியில் இணைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.