தமிழகத்தில் மேலும் 3 மாதம் கால அவகாசம் நீட்டிப்பு – அரசு உத்தரவு!

0
தமிழகத்தில் மேலும் 3 மாதம் கால அவகாசம் நீட்டிப்பு - அரசு உத்தரவு!
தமிழகத்தில் மேலும் 3 மாதம் கால அவகாசம் நீட்டிப்பு - அரசு உத்தரவு!
தமிழகத்தில் மேலும் 3 மாதம் கால அவகாசம் நீட்டிப்பு – அரசு உத்தரவு!

தமிழகத்தில் விதிமீறலுடன் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை வரன்முறை செய்வதற்கான கால அவகாசம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த கால அவகாசம் ஏற்கனவே ஜூன் 30 ஆம் தேதி வரை கொடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

விதிமீறல் கட்டிடங்கள்:

பொதுவாக ஒரு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்றால் அதற்கு முன்னதாக அரசின் அனுமதியை பெற்றிருக்க வேண்டும். அதாவது புதிதாக கட்டப்பட உள்ள கட்டிடத்தின் அமைப்பு, கட்டுமானம், அளவு குறித்து அரசிடம் அனுமதி பெற வேண்டும். பின்னர் புதிய கட்டிடம் கட்டவுள்ள இடத்தை ஆய்வு செய்து, கட்டிடம் கட்டப்படுவதற்கான அனுமதியை அரசு வழங்கும்.

இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு – பீகார் அரசு அறிவிப்பு!

இவ்வகையான அனுமதி இல்லாமல் கட்டப்படும் கட்டிடங்கள் அனைத்தும் விதிமீறல் கட்டிடங்களாக கருதப்படுகிறது. இந்த முறையான அனுமதி பெறாத கட்டிடங்களை இடிப்பதும், வரன்முறை செய்வதுமான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இப்படிப்பட்ட விதிமீறல் கட்டிடங்களை வரன்முறை செய்வதற்கு ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது.

TN Job “FB  Group” Join Now

இந்த கால அவகாசமானது கடந்த சில நாட்களுக்கு முன்னதாக முடிந்துள்ள நிலையில், அவற்றை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் உள்ள விதிமீறல் கட்டிடங்களை வரன்முறை செய்வதற்கான கால அவகாசம் செப்டம்பர் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!