அடுத்த 3 ஆண்டுகளுக்குள் 3,00,000 வேலைவாய்ப்புகள் – ஆன்லைன் காப்பீட்டு நிறுவனங்கள்!

0
அடுத்த 3 ஆண்டுகளுக்குள் 3,00,000 வேலைவாய்ப்புகள் - ஆன்லைன் காப்பீட்டு நிறுவனங்கள்!
அடுத்த 3 ஆண்டுகளுக்குள் 3,00,000 வேலைவாய்ப்புகள் - ஆன்லைன் காப்பீட்டு நிறுவனங்கள்!
அடுத்த 3 ஆண்டுகளுக்குள் 3,00,000 வேலைவாய்ப்புகள் – ஆன்லைன் காப்பீட்டு நிறுவனங்கள்!

இந்தியாவில் செயல்பட்டு வரும் ஆன்லைன் காப்பீட்டு விற்பனை நிறுவனங்கள் அடுத்த மூன்று ஆண்டுகளில் சுமார் 2,50,000 முதல் 3,00,000 வரையிலான புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேலை வாய்ப்பு

கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் முடங்கி கிடந்த வேலை வாய்ப்புகள் மீண்டுமாக பெருகத் துவங்கியுள்ளது. அந்த வகையில் அரசுத்துறைகள், தனியார் நிறுவனங்கள் போன்றவை புதிய ஊழியர்களை பணியமர்த்தி வருகிறது. தவிர இந்தியாவில் உள்ள TCS, விப்ரோ, இன்போசிஸ் போன்ற முன்னணி IT நிறுவனங்களும் ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக்கொண்டு புதிய ஊழியர்களை பணியமர்த்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. அதன் கீழ் இந்நிறுவனங்கள் அனைத்தும் புதிய நிதியாண்டில் 1 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்களை பணியமர்த்தும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

தமிழக பள்ளி முதல்வர்கள் / தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு!

இந்நிலையில் இந்திய ஆன்லைன் காப்பீட்டு விற்பனை நிறுவனங்களும் புதிய ஊழியர்களை பணியில் அமர்த்த இருப்பதாக தெரிவித்துள்ளது. அந்த வகையில் இன்னும் 3 ஆண்டுக்குள் சுமார் 2,50,000 முதல் 3,00,000 வரையிலான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான செய்திகள் இக்கருத்தை உறுதிப்படுத்துகின்றன. அதாவது ப்ராக்ஸிஸ் குளோபல் அலையன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக பங்குதாரர் மற்றும் நிதிச் சேவைகளின் தலைவருமான ஷிஷிர் மங்கட், இந்நிறுவனம் நேரடி மற்றும் மறைமுக வழிகள் மூலம் பல புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அதன் கீழ் இந்த பணியமர்த்தல் தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பு பகுப்பாய்வு, ஆட்டோமேஷன் உள்ளிட்ட விற்பனை மற்றும் விநியோக பணியிடங்களில் ஏற்படுத்தப்பட உள்ளது. இதற்கிடையில், இந்திய இன்சர்டெக் அசோசியேஷன் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்வேதாங்க் வர்மா, இந்தியாவில் ஆன்லைன் காப்பீட்டு விற்பனையாளர்கள் வரும் 2025க்குள் தங்கள் பிரீமியத்தை இரட்டிப்பாக்கி ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

TN Job “FB  Group” Join Now

மேலும் புதிய வேலை வாய்ப்புகள் குறித்து கவர்ஃபோக்ஸின் தலைமை நிர்வாகி சஞ்சிப் ஜா கூறுகையில், ‘இந்தியாவில் காப்பீட்டு விநியோகம் மிகவும் வித்தியாசமான முறையில் மாறி வருகிறது. ஆயுள் காப்பீட்டு கழகமான LIC யில் மட்டும் சுமார் 1.5 மில்லியன் முகவர்கள் உள்ளனர். காப்பீட்டு நிறுவனங்களில் கடந்த 5 முதல் 7 ஆண்டுகளில், டிஜிட்டல் உருவாக்க முயற்சிகள் அதிதீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. அடுத்த சில ஆண்டுகளில் இந்த முயற்சிகள் அதிகரிக்கும்’ என தெரிவித்துள்ளார்.

பொதுவாக இந்திய ஆன்லைன் இன்சூரன்ஸ் நிறுவனங்களில் ஆரம்ப சலுகைகளாக பவுண்ட் பாலிசி பஜார், டிஜிட்டல் இன்சூரன்ஸ், பேங்க் பஜார், கவர்ஃபோக்ஸ் உள்ளிட்டவைகள் வழங்கப்படுகிறது. இந்த நடவடிக்கைகள் மூலம் காப்பீட்டு நிறுவனங்களின் விநியோகம் மற்றும் டிஜிட்டல் பிரிவுகள் நிச்சயமாக வளர்ச்சியை காணும். அதே வேளையில், இந்த துறை முன்னேறும்போது, சுகாதாரம், ஆட்டோ மற்றும் ஆயுள் காப்பீடு ஆகியவை ஆன்லைன் மற்றும் நேரடி காப்பீட்டு விற்பனையின் முக்கிய பகுதியாக இருக்கும் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!