தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் – 3 லட்சம் பேர் பதிவு!
கொரோனா பரவல் காரணமாக தாமதம் அடைந்த புதிய ரேஷன் கார்டுகளுக்கான பணிகள் சமீபத்தில் மீண்டுமாக துவங்கியுள்ளது. அந்த வகையில் புதிய ரேஷன் அட்டைகளுக்கு இதுவரை 3 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
ரேஷன் அட்டைகள்
மத்திய அரசு வழங்கியுள்ள அடையாள அட்டை ஆவணமான ரேஷன் அட்டைகள் அரசு தரும் நலத்திட்ட உதவிகளை பெறுவது, சமையல் எரிவாயு சிலிண்டர் பெற்றுக்கொள்வதற்கு முக்கியமாகும். தவிர ரேஷன் கடைகளில் குறைந்த விலையிலான அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் உள்ளிட்டவைகளை பெற்றுக்கொள்ள இவ்வகை ரேஷன் அட்டைகள் தேவைப்படுகிறது. தமிழகத்தில் இந்த ரேஷன் அட்டைகளின் கீழ் 2 கோடி 5 லட்சம் பேர் அரசின் திட்டங்களை பெற்று பயனடைந்து வருகின்றனர்.
தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கும் ஆல்பாஸ் – அரசுக்கு கோரிக்கை!
இது தவிர தமிழகத்தில் கொரோனா நிவாரண நிதி, மளிகை பொருட்கள் உள்ளிட்டவைகளும் ரேஷன் அட்டைகள் மூலமே கொடுக்கப்படுகின்றன. இதனிடையே தமிழகத்தில் புதிய ரேஷன் அட்டைகளுக்காக விண்ணப்பம் செய்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆன்லைன் வழியாக மேற்கொள்ளப்படும் இவ்விண்ணப்பங்களில் ஒரு நாளைக்கு 15 ஆயிரம் பேர் வரை பதிவு செய்து வருகின்றனர்.
TN Job “FB Group” Join Now
அதன் கீழ் தினசரி 10 முதல் 12 ஆயிரம் வரை புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படுவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். முன்னதாக கொரோனா பரவல் காரணமாக தடைபட்டிருந்ததான இப்பணிகள் தற்பொழுது துவங்கியுள்ளதை தொடர்ந்து, ஒருவர் புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்த 15 நாட்களுக்குள்ளாக அவை கிடைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் படி இதுவரை சுமார் 3 லட்சம் பேர் புதிய ரேஷன் அட்டைகளுக்கு விண்ணப்பங்களை செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.