2022ம் ஆண்டில் ஐடி துறையில் 3.75 லட்சம் வேலைவாய்ப்புகள் – டிஜிட்டல் நிறுவன ரிப்போர்ட்!
வரவிருக்கும் 2022ஆம் ஆண்டில் ஐடி-பிபிஎம் துறையில் 3.75 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என தகவல் வந்துள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் அடுத்த 5 ஆண்டுகளில் 1 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேலைவாய்ப்பு:
இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கால் ஏராளமானோர் வேலையிழந்து சிரமப்பட்டு வருகின்றனர். தற்போது மாநில அரசுகள் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வரும் நிலையில் வேலையிழந்த மக்கள் மீண்டும் வேலைவாய்ப்புகளை தேடி வருகின்றனர். அவர்களுக்கு உதவும் தனியார் நிறுவனங்கள் பல்வேறு வேலை வாய்ப்புகளை வழங்கி வருகின்றனர். மேலும் அரசு போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகி வருகிறது. அதனை தொடர்ந்து தற்போது ஐடி நிறுவனங்களின் வேலைவாய்ப்புகள் பெருகி வருகிறது. அனைத்து வேலைகளையும் வீட்டிலிருந்த படி ஆன்லைன் மூலமாக நடைபெற்று வருவதால் ஐடி துறை வளர்ச்சியை எட்டியுள்ளது.
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஹாப்பி நியூஸ் – மத்திய அரசின் புதிய செயலி!
மேலும் ஊழியர்களின் தேவையும் அதிகரித்து வருகிறது. அதனால் முன்னணி நிறுவனங்கள் வேலைவாய்ப்பு வழங்க முன்வந்தனர். அந்த வகையில் முன்னணி ஐடி நிறுவனங்கள் விப்ரோ, டிசிஎஸ், எச்சிஎல் போன்ற நிறுவனங்கள் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை அறிவித்து வருகிறது. அண்மையில் பிரபல ஐடி நிறுவனங்கள் அவுட் ஆன ஃப்ரஷர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க முன் வந்தது. அதனால் 2022 ஆம் ஆண்டு இந்திய ஐடி பிபிஎம் துறையில் 3.75 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று ஆய்வுகள் தெரிவிக்கிறது. இதனால் இனி வரும் நாட்களில் பிபிஎம் துறை ஊழியர்களின் எண்ணிக்கை 48.5 லட்சமாக உயரும்.
தமிழகம் உட்பட 10 மாநிலங்களுக்கு விரையும் மத்திய குழு – ஓமிக்ரான் தடுப்பு நடவடிக்கை!
இந்த நிலை தொடர்ந்தால் அடுத்த 5 ஆண்டுகளில் ஐடி துறையில் 1 கோடி பேருக்கு வேலை கிடைக்கும் என்று ஆய்வறிக்கை கூறுகிறது. தற்போது டிஜிட்டல் திறமைகளுக்கு அதிக தேவை உள்ளது Data engineering, Data science, Machine learning, Artificial intelligence ஆகிய திறன்கள் கொண்டவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் பகுதி மாற்றுக்கும் முழு நேர ஊழியர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். மேலும் ஒப்பந்த ஊழியர்களுக்கான டிமாண்ட் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.