தமிழகத்திற்கு 3.5 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் ஒதுக்கீடு!
தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என தமிழக அரசின் சார்பில் மத்திய அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது, அதன் படி தமிழகத்திற்கு 3.5 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
கொரோனா தடுப்பூசிகள்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காட்டுத்தீ போல பரவி வந்ததால் அரசு தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தியது. முதல் அலையை விட இரண்டாம் அலை எதிர்பாராத அளவு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. மாவட்டம் தோறும் கொரோனா தடுப்பு மையங்கள் அமைக்கப்பட்டு நோயாளிகள் சிகிசைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். மேலும் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தடுப்பூசிகள் பற்றாக்குறை நிலவுவதாக பொதுமக்கள் புகார் அளிக்கின்றனர்.
மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கை – இந்த ஆண்டு முதல் துவக்கம்!
இதனால் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தாமதமாகிறது. எனவே மத்திய அரசு கூடுதல் தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்து வந்தது. மேலும் இந்த தடுப்பூசி பற்றாக்குறையால் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த முடியாமல் உள்ளது. மருத்துவமனைகளில் தடுப்பூசிகள் இல்லாததால் தடுப்பூசி செலுத்தி கொள்ள வருபவர்கள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். இந்த தடுப்பூசி பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி ஆலையை திறக்க முதல்வர் கோரிக்கை விடுத்தார்.
TN Job “FB Group” Join Now
மேலும் போதிய அளவு தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய வேண்டும் என மருத்துவ பணிகள் கழகத்திற்கு அரசு உத்தரவிட்டது. கொரோனாவை ஒழிக்க தடுப்பூசிகள் மட்டுமே பேராயுதமாக உள்ளது. அதனால் பல்வேறு அமைப்பினரும் மத்திய அரசு உடனடியாக தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று 3.5 லட்சம் தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்துள்ளது மத்திய அரசு. நேற்று 2.50 லட்சம், இன்று ஒரு லட்சம் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.