தமிழகத்தின் 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு கனமழை பெய்யும் – அசானி புயல் எதிரொலி!
தமிழகத்தில் சென்னை உள்பட 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை கொட்டி தீர்க்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. அதனால் சென்னை மற்றும் 11 மாவட்ட பொது மக்களும் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
வானிலை அறிக்கை:
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அக்னி நட்சத்திரம் ஆரம்பித்து வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய அசானி புயல் நேற்று முன்தினம் (மே 8) மாலை தீவிர புயலாக வலுப்பெற்று தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டது. அதன் பிறகு வடக்கு-வடகிழக்கு இசையில் ஒரிசா கடற்கரை ஓட்டிய வட மேற்கு வங்க கடல் பகுதியை நோக்கி நகரக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
LPG பயனர்கள் கவனத்திற்கு – விலை உயர்வு & மானியம் ரத்து! அரசு அறிவிப்பு!
இந்த புயலின் காரணமாக ஒடிசாவில் 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் 33 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு மிதமான மழை பெய்த காரணத்தால் மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் சென்னையில் 3 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் அது குறித்த முழு விபரங்களும் வெளியாகி உள்ளது. அந்த அறிக்கையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, திருப்பூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.