தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ் – மூன்று நாட்கள் கடைகளுக்கு விடுமுறை?
தமிழகத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் தேவையான கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜூன் 7 முதல் 9ஆம் தேதி வரை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கடைகள்:
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அரசு அறிவித்துள்ளது. அதன் படி கடந்த ஜனவரி மாதம் 1 ஆம் தேதி முதல் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. மீண்டும் தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 17 சதவிகிதத்தில் இருந்து 31 சதவிகிதமாக உயர்த்தி வழங்கப்பட்டது. ஆனால் ரேஷன் கடை ஊழியர்களுக்கு மட்டும் அகவிலைப்படி உயர்வு குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. மேலும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் எதுவும் வழங்கப்படவில்லை.
நாளை (மே 31) பொது விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!
இந்நிலையில் ரேஷன் கடை பணியாளர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் தென்காசியில் நடைபெற்றது. அதில் அகவிலைப்படி உயர்வு, நியாய விலைக் கடைகளுக்கு தனித்துறை உருவாக்க வேண்டும். புதிய 4 ஜி விற்பனை முனையம் வழங்க வேண்டும். விடுமுறை நாள்களில் நகா்வுப் பணியை நிறுத்த வேண்டும். பொட்டல முறையை அமல்படுத்த வேண்டும், தரமற்ற பொருட்களுக்காக ரேஷன் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 7, 8, 9 ஆகிய மூன்று நாள்கள் போராட்டம் நடத்த இருப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
எனவே அந்த மூன்று நாட்களும் ரேஷன் கடைகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடை ஊழியர்கள் இந்த தேதிகளில் போராட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றனர். அதனால் பொதுமக்கள் ரேஷன் கடைகளில் ஜூன் மாதத்திற்கான பொருள்களை 7 ஆம் தேதிக்கு முன்னதாக வாங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கான பணிகளும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.