ரேஷன் கடைகளில் ஆண்டிற்கு 3 இலவச LPG சிலிண்டர்கள்? மாநில அரசு அறிவிப்பு!
நாடு முழுவதும் பலர் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் சலுகைகளை நம்பி இருக்கும் நிலையில் அரசும் அதற்கு தகுந்தாற் போல பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் ரேஷன் கடைகள் மூலமாக ஆண்டிற்கு 3 இலவச எல்பிஜி சிலிண்டர்கள் வழங்கப்படும் என உத்தரகாண்ட் அரசு தெரிவித்துள்ளது.
இலவச எல்பிஜி சிலிண்டர்கள்
அரசு வழங்கும் பல்வேறு நலத்திட்டங்கள் ரேஷன் கடைகள் மூலமாகவே மக்களிடம் சென்றடைகின்றன. ரேஷன் கடைகளில் வழங்கப்படும் மலிவு விலை உணவு பொருள்கள் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தில் முக்கிய பங்கை வகிக்கிறது. மேலும் பல நிதியுதவி திட்டங்களும் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு வழங்கப்படுகிறது. அந்த வகையில் தற்போது மக்களின் நிதி சுமையை குறைக்க ரேஷன் கடைகளில் ஆண்டிற்கு 3 இலவச எல்பிஜி சிலிண்டர்கள் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
Exams Daily Mobile App Download
இந்த திட்டத்தில் பயனாளராக இருக்க நீங்கள் அந்தியோதயா அட்டை வைத்திருக்க வேண்டும். உத்தரகாண்ட் அரசு அந்தியோதயா அட்டை வைத்திருப்பவர்களுக்கு தான் ஆண்டிற்கு 3 இலவச எல்பிஜி சிலிண்டர்கள் வழங்க இருப்பதாக முடிவு செய்துள்ளது. இந்நிலையில் இலவச எல்பிஜி கேஸ் சிலிண்டர் திட்டத்துக்கான மொத்த சுமை ரூ.55 கோடியை உத்தரகாண்ட் மாநில அரசே ஏற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை பெற உத்தரகாண்ட் அரசு தெரிவித்துள்ள நிபந்தனைகளை பற்றி பார்க்கலாம். அதன் படி,
தமிழகத்தில் மாநகராட்சிப் பள்ளிகளிலும் தற்காலிக ஆசிரியர்கள் பணி? வலுக்கும் எதிர்ப்பு
- இந்த திட்டத்தின் பயனாளி உத்தரகண்ட் மாநிலத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
- மேலும் தகுதியானவர்கள் அந்தியோதயா ரேஷன் கார்டு வைத்திருப்பவராக இருக்க வேண்டும்.
- அது மட்டுமில்லாமல் அந்தியோதயா ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் எரிவாயு இணைப்பு அட்டையுடன் லிங்க் செய்யப்பட வேண்டும்.
- மேலும் இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பினால் ஆதார் அட்டையை அந்தியோதயா அட்டையுடன் இணைக்கப்பட வேண்டும்.
- இல்லையென்றால் நீங்கள் இந்த திட்டத்தில் இருந்து நீக்கப்படுவீர்கள். மாநில அரசு, மாவட்ட வாரியாக அந்தியோதயா நுகர்வோர் பட்டியல் தயாரிக்கப்பட்டு, உள்ளுர் கேஸ் ஏஜென்சிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால், அந்தியோதயா கார்டுதாரர்கள் தங்களின் ரேஷன் கார்டை, தங்களது கேஸ் இணைப்புடன் லிங்க் செய்ய வேண்டும்.