அரசு ஊழியர்களுக்கு வாரத்துக்கு 3 நாட்கள் விடுமுறை? ஜூலை 1ம் தேதி முதல் அமல்! அரசு அறிவிப்பு!
மத்திய அரசு புதிய தொழிலாளர் விதியை விரைவில் அமல்படுத்த போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் புதிய தொழிலாளர் விதி வேலையை சிறப்பாக நிர்வகிப்பதற்கும், சிறந்த வேலை-வாழ்க்கை சமநிலையை ஏற்படுத்துவதற்கும் உதவும் புரட்சிகரமான நடவடிக்கைகளாக கருதப்படுகின்றன.
புதிய விதிகள்:
மத்திய அரசு, புதிய தொழிலாளர் சட்ட விதிமுறைகளை அமல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. பல மாதங்கள் பரிசீலனை செய்த பிறகு தொழிலாளர் நலன் தொடர்பான 4 முக்கிய திருத்தங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், அருணாசலப் பிரதேசம், ஹரியானா, ஜார்க்கண்ட், பஞ்சாப், மணிப்பூர், பிஹார், இமாசலப் பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஆகியவை இந்த வரைவு கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளன.
Exams Daily Mobile App Download
இந்த மாநிலங்களில் புதிய தொழிலாளர் சட்ட விதிமுறைகள் ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இருப்பினும் தமிழ்நாடு உள்பட ஒரு சில மாநிலங்கள் இந்த புதிய தொழிலாளர் விதியை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால் ஜூலை 1 முதல் அந்த மாநிலங்களில் புதிய தொழிலாளர் விதிகள் அமலுக்கு வராது. இந்த புதிய அமலுக்கு வந்தால் ஊழியர்கள் சம்பளம் முதல் PF வரை என அனைத்திலும் மாற்றங்கள் ஏற்படும்.
ஊழியர்கள் பணி நேரம்:
புதிய தொழிலாளர் விதிகளின்படி ஊழியர்களை பணி நேரம் 8 மணி நேரத்திற்குப் பதிலாக 12 மணி நேரமாக அதிகரிக்கும். ஆனால் அதே நேரத்தில் அதை ஈடுகட்டும் வகையில் வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பணியாளர்கள் ஒரு வாரத்தில் பணி செய்யும் மொத்த வேலை நேரம் மாறுவதற்கு வாய்ப்பில்லை.
தமிழக சத்துணவுத்துறையில் வேலைவாய்ப்பு – ஜூலை 5ம் தேதி கடைசி நாள்! முழு விவரங்கள் இதோ!
ஆண்டு விடுப்பு:
விடுமுறை புதிய தொழிலாளர் விதியில் ஊழியர்கள் எடுக்கும் விடுமுறையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஊழியர்களின் ஓராண்டு எஞ்சியிருக்கும் விடுமுறையை அவர்கள் அடுத்த பணி ஆண்டில் சேர்த்துக் கொள்ளலாம் என்ற தளர்வுகள் செய்யப்பட உள்ளன. ஆனால், ஓராண்டில் 180 நாட்கள் பணி செய்திருந்தாலே புதிய ஊழியர்கள் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்ற விதிமுறை மாற்றப்பட்டு, இனி அது 240 நாட்கள் என திருத்தம் செய்யப்பட உள்ளது. ஆனால் இந்த விதிகள் கட்டாயம் அல்ல. நிறுவனத்திற்கும் ஊழியர்களுக்கும் இடையே நெகிழ்வுத்தன்மையுடன் செயல்படுத்தலாம்.
வருங்கால வைப்பு நிதி:
இந்த நிலையில் புதிய தொழிலாளர் விதியின்படி ஊழியர்களுக்கு பிடித்தம் செய்யப்படும் வருங்கால வைப்பு நிதி அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஒரு ஊழியரின் மொத்த சம்பளத்தில் 50 சதவீதம் அடிப்படை சம்பளமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஊழியர்கள் மற்றும் நிறுவனங்கள் வைப்பு நிதிக்கு செலுத்த வேண்டிய தொகை அதிகம் என்பதால் ஊழியர்கள் கையில் வாங்கும் சம்பளம் குறைய வாய்ப்பு உள்ளது. ஆனால் அதே நேரத்தில் ஊழியர்கள் ஓய்வு பெறும் போது அவர்களுக்கு கிடைக்கும் தொகை மிகப்பெரியதாக இருக்கும் என்பதும் ஓய்வுக்குப் பின் அவர்களுடைய வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.