பள்ளிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை? கொரோனா பரவல் எதிரொலி! அரசு உத்தரவு!

0
பள்ளிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை? கொரோனா பரவல் எதிரொலி! அரசு உத்தரவு!
பள்ளிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை? கொரோனா பரவல் எதிரொலி! அரசு உத்தரவு!
பள்ளிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை? கொரோனா பரவல் எதிரொலி! அரசு உத்தரவு!

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தற்போது கர்நாடக மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதால், பள்ளிகளுக்கு விடுமுறை வழங்க உத்தரவு விடப்பட்டு உள்ளது.

மாநில அரசு உத்தரவு:

சீனாவின் வூகான் மாகாணத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக அளவில் பலத்த பொருளாதார இழப்புகளையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி கோரத்தாண்டவம் ஆடியது. சுமார் மூன்று வருடங்களாக கொரோனாவின் தாக்கம் நீடித்து வரும் நிலையில் மூன்றாவது அலை நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது கடந்த ஒரு மாதமாக சிறிது சிறிதாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

Exams Daily Mobile App Download

அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அங்கு வியாழக்கிழமை நிலவரப்படி ஒரே நாளில் 833 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 791 பேர் தலைநகர் பெங்களூரை சேர்ந்தவர்கள், இது முந்தைய நாளை விட 28% அதிகரித்துள்ளது. இந்த தகவல் அந்த மாநில மக்களை கடுமையாக அதிர்ச்சியடைய செய்துள்ளது. மேலும் கர்நாடகாவில் உள்ள பள்ளிகளில் 10 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதனால் பள்ளிகளில் 2-3 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்குமாறு பொது அறிவுறுத்தல் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

நாடு முழுவதும் தீவிரமடையும் அக்னிபாத் போராட்டம் – சென்னையிலும் துவங்கியது!

கொரோனா பாதிப்பு ஏற்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் பெங்களூருவை சேர்ந்த ஒருவர் இரு தினங்களுக்கு முன்பு உயிரிழந்தார். கடந்த செவ்வாயன்று தசரஹள்ளி மண்டலத்தில் உள்ள இரண்டு பள்ளிகளில் 31 மாணவர்களுக்கு RAT (கோவிட் -19 க்கான சோதனை) மேற்கொள்ளப்பட்டது. பின்னர், குழந்தைகள் ஆர்டி-பிசிஆர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர், அவர்களில் 21 பேருக்கு கொரோனா நேகட்டிவ் என வந்தது.

மேலும் 10 மாணவர்களின் முடிவுகளுக்காக காத்து கொண்டு உள்ளனர். இதையடுத்து புதன்கிழமை, மாநிலத்தில் 648 புதிய கொரோனா வழக்குகள் பதிவாகியுள்ளன, அதில் 615 பேர் பெங்களூரைச் சேர்ந்தவர்கள். தினசரி சோதனை நேர்மறை விகிதம் 2.8% மற்றும் 10 நாட்களுக்குப் பிறகு நகரத்தில் ஒரு கோவிட் இறப்பு காணப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் கர்நாடகாவில் பொது இடங்களில் மக்கள் முககவசம் அணிவது கட்டாயம் என்ற முடிவை அரசு எடுத்துள்ளது. சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதும் அவசியம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!