அரசு பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை – மாணவர்கள், ஆசிரியருக்கு கொரோனா தொற்று எதிரொலி!
கோவை மாவட்டத்தின் பொள்ளாச்சியில் உள்ள அரசு பள்ளியின் ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அப்பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
விடுமுறை அறிவிப்பு:
தமிழகத்தில் கொரோனா தொற்று 2ம் அலையின் பாதிப்புகள் குறைந்து இயல்பு நிலை திரும்பியுள்ளதால், பள்ளிகள் திறக்க பல தரப்புகளில் இருந்தும் கோரிக்கைகள் அரசுக்கு வைக்கப்பட்டது. இதனால் தமிழக பள்ளிக்கல்வித்துறை நீண்ட ஆய்வுகள் மற்றும் ஆலோசனைகளுக்கு பிறகு கடந்த செப்டம்பர் 1ம் தேதி 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை நடத்தி வருகின்றது. பல மாதங்கள் கழித்து மீண்டும் பள்ளிகள் செயல்படுவதால் மாணவர்கள் மிகுந்த ஆர்வம் மற்றும் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வருகின்றனர்.
தமிழக அரசு வேலைவாய்ப்புகளில் ஆண்களுக்கு 50% இடஒதுக்கீடு – கோரிக்கை மனு!
தமிழக அரசு பள்ளிகள் கடைபிடிக்க வேண்டிய அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளையும் அறிவித்து அதனை பின்பற்ற உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நடப்பு ஆண்டிற்குள் 1,00,000 பேருக்கு வேலைவாய்ப்பு – ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் திட்டம்!
இந்நிலையில், பொள்ளாச்சியில் உள்ள அரசு பள்ளியை சேர்ந்த மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 5 மாணவர்கள் மற்றும் 1 ஆசிரியருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது. பள்ளி மற்றும் வகுப்பறை முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் நடந்து வருகிறது. தமிழகத்தில் பள்ளிகள் திறந்த பின்னர் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் பெற்றோர்கள் மிகுந்த கலக்கத்தில் உள்ளனர்.