தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனா காலத்தில் தொடர்ந்து பணியாற்றிய ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஜூலை மாதத்தில் 2 நாட்களும், ஆகஸ்ட் மாதத்தில் 1 நாளும் விடுமுறை அளிக்கப்பட்டுவதாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
விடுமுறை அறிவிப்பு
கடந்த 2 மாதங்களாக தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது வரை நீட்டிக்கப்பட்டுள்ள பொது முடக்கத்தினால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் சில சலுகைகளை மாநில அரசு கொடுத்துள்ளது. அந்த வகையில் தமிழக அரசின் அறிவிப்பின் கீழ் 4 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி மற்றும் இலவச மளிகை பொருட்கள் அனைத்தும் ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்பட்டது.
வாட்ஸ் அப் (WhatsApp) பயனர்கள் கவனத்திற்கு – ஸ்டேட்டஸ் அப்டேட் பகிர்வு!
இந்த நிலையில் கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் ஜூலை 17, 24 மற்றும் ஆகஸ்ட் 14 உள்ளிட்ட நாட்களில் மூடப்படுவதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இது குறித்து அம்மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக வாழ்வாதரத்தை இழந்த அனைத்து குடும்பங்களுக்கும் தலா 4 ஆயிரம் ரூபாய் கொரோனா நிவாரணம் மற்றும் 14 வகையான இலவச மளிகை பொருட்களை தமிழக அரசு வழங்கியது.
TN Job “FB Group” Join Now
இந்த பொருட்கள் அனைத்தும் ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்பட்டது. இந்த பணிகளை மேற்கொண்ட ரேஷன் கடை ஊழியர்களுக்கு மே 16 மற்றும் ஜூன் 4,11 உள்ளிட்ட நாட்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இருப்பினும் அந்த நாட்களில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு விடுமுறை கொடுக்கப்படாத காரணத்தால், ஜூலை 17, 24 மற்றும் ஆகஸ்ட் 14 உள்ளிட்ட நாட்கள் விடுமுறை நாட்களாக மாற்றி அறிவிக்கப்படுகிறது. இந்த நாட்களில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள எந்தவொரு ரேஷன் கடைகளும் இயங்காது என குறிப்பிடப்பட்டுள்ளது.