வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை, சம்பளம், PF மாற்றம் – புதிய ஊதியக் குறியீடு விபரங்கள்!

0
வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை, சம்பளம், PF மாற்றம் - புதிய ஊதியக் குறியீடு விபரங்கள்!
வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை, சம்பளம், PF மாற்றம் - புதிய ஊதியக் குறியீடு விபரங்கள்!
வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை, சம்பளம், PF மாற்றம் – புதிய ஊதியக் குறியீடு விபரங்கள்!

மத்திய அரசு அறிவித்துள்ள புதிய ஊதியக் குறியீடுகள் ஊழியர்களின் விடுமுறை நாட்கள், சம்பளம் மற்றும் வேலை நேரம் ஆகியவற்றில் சில முக்கிய மாற்றங்களை செய்துள்ளது. இந்த மசோதா வரும் அக்டோபர் மாதம் முதல் அமல்படுத்தப்பட இருக்கிறது.

ஊதியக் குறியீடு

மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய ஊதியக் குறியீடு கொள்கையின் கீழ் வரும் நாட்களில் ஊழியர்களின் ஊதியம் மற்றும் வேலை நேரத்தில் மாற்றங்கள் ஏற்பட உள்ளது. இந்த புதிய ஊதியக் குறியீட்டின் கீழ் ஊழியர்களின் வேலை நேரம் 9 முதல் 12 மணி நேரம் வரை அதிகரிக்கப்பட உள்ளது. அதாவது தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகத்தின் படி, ஒரு வாரத்தில் 48 மணி நேர வேலை என்ற விதி அமலுக்கு வர உள்ளது. இதனிடையே சில தொழிற்சங்கங்கள் 12 மணிநேர வேலை மற்றும் 3 நாட்கள் விடுப்பு என்ற புதிய விதி குறித்து சந்தேகங்களை எழுப்பி இருந்தனர்.

செப்.1ம் தேதி 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

இதற்கு பதிலளித்த மத்திய அரசாங்கம், ஒரு வாரத்தில் 48 மணி நேர வேலை என்ற விதியின் கீழ், ஒரு ஊழியர் தொடர்ந்து 8 மணி நேரம் வேலை செய்தால் அவர்களுக்கு வாரம் ஒரு நாள் மட்டும் விடுமுறை கிடைக்கும் என்றும் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை செய்தால், அந்த ஊழியருக்கு வாரத்தில் 3 நாட்கள் வரை விடுப்பு கொடுக்க வேண்டும் என்றும் தெளிவுபடுத்தியது. இதை தொடர்ந்து ஊழியர்களின் சம்பள அமைப்பு மாற்றங்களை பொருத்தளவு, ஊதிய குறியீடு சட்டம் 2019 ன் படி, ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளம் (CTC) அந்த நிறுவனத்தின் செலவில் 50 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கக்கூடாது.

TN Job “FB  Group” Join Now

தற்போது, பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை கணிசமாக குறைத்து, அதிகமான கொடுப்பனவுகளை வழங்குகின்றன. மேலும் நாட்டில் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் அதாவது குறைந்தபட்ச சம்பளம் கிடைப்பது இதுவே முதல் முறையாகும். புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காகவும் சில புதிய திட்டங்கங்களை அரசு கட்டமைத்து வருகின்றது. இதனுடன் ஊழியர்களுக்கு சமூக பாதுகாப்பை வழங்குவதற்காக ஒவ்வொருவரின் சம்பள கட்டமைப்பின் ஒரு பகுதி வருங்கால வைப்பு நிதியாக வைக்கப்பட உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!