CBSE 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – 2ம் பருவ தேர்வு குறித்த தகவல்கள்!
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் நடத்தி வரும் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்கள் குறித்த சர்ச்சை எழுந்துள்ளது. இந்நிலையில் 2ம் பருவ தேர்வுகளை நடத்துவது குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2ம் பருவ பொதுத்தேர்வு:
சிபிஎஸ்இ 2ம் பருவ தேர்வுகள் ஏப்ரல் 26 ஆம் தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்பருவ பொதுத்தேர்வில் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. இந்த மாதம் வெளியாக வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் பருவம் மற்றும் 2ம் பருவ தேர்வுகள் பாடத்திட்டத்தில் 50 சதவீதத்தைக் கொண்டிந்தது. இறுதி முடிவுகள் 2 தேர்வுகள் நடத்தப்பட்ட பிறகு மட்டுமே அறிவிக்கப்பட உள்ளது. முதல் பருவத்தின் முடிவுகளை தேர்ச்சி அடைந்ததாகவோ அல்லது தோல்வி அடைந்ததாகவோ அறிவிக்க கூடாது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் வேறு வேறு பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளை நடத்தலாம்.
தமிழகத்தில் வாக்குரிமை உள்ளவர்களுக்கு பிப்.19ம் தேதி விடுமுறை – நிறுவனங்களுக்கு அரசு உத்தரவு!
இந்த முறை மாணவர்களின் சொந்த பள்ளியில் தேர்வுகள் நடத்தப்படும் முடிவில் இருந்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் முதல் பருவ CBSE தேர்வுகள் சொந்த பள்ளிகளிலேயே நடத்தப்பட்டது. அப்போது வெளிப்புற தேர்வு கண்காணிப்பாளர்கள் தேர்வுகளை கண்காணிக்கவும், நேர்மையாக நடத்தவும் நியமிக்கப்பட்டனர். இருப்பினும் முதல் பருவ CBSE தேர்வுகள் பல இடங்களில் நேர்மையற்ற முறையில் நடத்தப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ பள்ளிகள் மேலாண்மை சங்கம் இது தொடர்பாக குற்றம் சாட்டியுள்ளது.
TNPSC குரூப் 2, குரூப் 4 VAO காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – தேர்வில் நேர மாற்றம்!
பல தேர்வு வினாக்களில் விடை தெரியாத பதில்களுக்கு பதிலாக ‘சி’ என்ற விடையை தேர்வு செய்ய ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். அதன்பிறகு, a, b அல்லது d ஆக மாற்றியதாகக் கூறப்படுகிறது. சிபிஎஸ்இ இதை உறுதிப்படுத்தாத நிலையில், தேர்வின் அதே நாளில் விடைத்தாள்களை சரிபார்ப்பதை நிறுத்துமாறு பள்ளிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், நாடு முழுவதும் உள்ள கோவிட்-19 கட்டுப்பாடுகள் கூடுதலாக தளர்த்தப்பட்டுள்ளன, மேலும் தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்னதாக தேர்வு அட்டவணைகளை முழுமையாக வெளியிடும் என்றும், மார்ச் இறுதிக்குள் cbse.nic.in ல் தேர்வின் முக்கிய விவரங்கள் பதிவிடப்படும்.