CBSE 10, 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – 2ம் பருவத்தேர்வு இன்று தொடக்கம்!
இந்தியாவில் சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்புகளுக்கான 2 ஆம் பருவத் தேர்வுகள் இன்று முதல் தொடங்குகிறது. இதனையடுத்து மாணவர்களுக்கு தேர்வு குறித்த புதிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
பருவத்தேர்வு:
இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா தொற்று அச்சத்தால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. நோய் பரவல் குறைந்த பிறகு பள்ளிகளை திறந்து வகுப்புகளை நடத்தலாம் என்று திட்டமிட்டு கொண்டிருந்த நிலையில் தொற்று பாதிப்புகளும், உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்த நிலையில் முதலில் மத்திய கல்வி வாரியம் 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து மாநில அரசுகளும் பொதுத்தேர்வை ரத்து செய்தது. இந்த நிலையில் அரசின் முயற்சியால் கொரோனா பரவல் சற்று குறைந்து வந்ததும் நாடு முழுவதும் மீண்டும் பள்ளிகள் படிப்படியாக திறக்கப்பட்டது.
1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – 5 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை!
இந்த நேரத்தில் மாணவர்களின் கல்வி நிலையை கருத்தில் கொண்டு பொதுத்தேர்வுகளை நடத்த மத்திய மற்றும் மாநில பள்ளி கல்வித்துறை திட்டமிட்டது. அப்போது முதல் கட்டமாக மத்திய கல்வி வாரியம் பொதுத்தேர்வை இரண்டு கட்டமாக நடத்தபடும் என்று அறிவித்தது. அதன்படி குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் படி கடந்த 2021 நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் முதல் கட்ட பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வின் முடிவுகளும் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் அடுத்த கட்ட பருவத்தேர்வு ஏப்ரல் மாதம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று 10, 12 ஆம் வகுப்புகளுக்கு தேர்வு இன்று தொடங்கி உள்ளது.
ExamsDaily Mobile App Download
சுமார் 30 லட்சம் மாணவர்கள் இத்தேர்வை எழுத உள்ளனர். ஜூன் 14ம் தேதி வரை இத்தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விடைத்தாள்கள் மற்றும் கூடுதல் தாள்களில் கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் ரோல் எண் மற்றும் பிற விவரங்களை எழுத வேண்டும். கடைசி நிமிட பதற்றத்தை தவிர்க்க சரியான நேரத்தில் தேர்வு நடைபெறும் இடத்திற்கு செல்ல வேண்டும். தேர்வு நடைபெறும் இடத்திற்கு தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு செல்ல கூடாது. கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.