தமிழகத்தில் 2ம் சுற்று பொறியியல் கலந்தாய்வு – 24,163 பேருக்கு தற்காலிக இடங்கள் ஒதுக்கீடு!
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 431 பொறியியல் கல்லூரிகளில் இளங்கலை படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு 2ம் சுற்று கலந்தாய்வு நிறைவடைந்த நிலையில் 24,163 பேருக்கு தற்காலிகமாக இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் கலந்தாய்வு:
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி பல மாதங்கள் ஆகிறது. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 431 பொறியியல் கல்லூரிகளில் 1,48,811 இடங்களை நிரப்ப பொறியியல் கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. இந்நிலையில் பொறியியல் முதற்கட்ட கலந்தாய்வில் மாற்றுத்திறனாளிகள் உட்பட சிறப்புப் பிரிவில் 668 பேருக்கு கல்லூரிகள் ஒதுக்கப்பட்டன.
மேலும் அதில் கலந்து கொண்டவர்களில் 10,340 பேருக்கு இடங்கள் உறுதி செய்யப்பட்டு சேர்க்கை வழங்கப்பட்டுள்ளது. அதன் பின் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நேற்று (செப்.27) நடைபெற்றது. அதில் 24,163 பேருக்கு தற்காலிகமாக இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பொறியியல் மாணவர் சேர்க்கை குழு தெரிவித்துள்ளது. மேலும் மாணவர்கள் தற்காலிக ஒதுக்கீட்டு இடங்களை ஒரு வாரத்திற்குள் உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் – போனஸ் தொகைக்கு மத்திய அரசு ஒப்புதல்!
Exams Daily Mobile App Download
இனி வருகிற நாட்களில் மற்ற மாணவர்களுக்கு கலந்தாய்வு திட்டமிட்டபடி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி பல மாதங்கள் ஆன நிலையில், நீட் தேர்வு முடிவுகள் வெளியாவதில் ஏற்பட்ட கால தாமதம் காரணமாக கலந்தாய்வு தற்போது நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும் கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணவர்கள் தாமதிக்காமல் கல்லூரிகளில் சேர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்