2வது எல்பிஎல் தொடர் – இலங்கையில் ஜூலை 30ம் தேதி தொடக்கம்!!
இலங்கை உள்ளூர் தொடரான லங்கா பிரீமியர் லீக் தொடரின் இரண்டாவது சீசன் வருகின்ற ஜூலை மாதம் 30ம் தேதி முதல் தொடங்கும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
எல்பிஎல் தொடர்:
இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டு முதல் ஐபிஎல் என்னும் உள்ளூர் தொடர் தொடங்கப்பட்டது. இந்த தொடர் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. இதனை தொடர்ந்து அனைத்து நாடுகளும் ஐபிஎல் தொடரை போல் தங்களது நாட்டிலும் உள்ளூர் தொடர்களை நடத்தி வருகின்றனர். அந்த வரிசையில் மேற்கு இந்திய தீவு, இலங்கை போன்ற பல கிரிக்கெட் வாரியம் தங்களது நாட்டில் உள்ளூர் தொடர்களை நடத்தி வருகிறது.
TN Job “FB Group” Join Now
இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் 14 வது சீசன் கொரோனா தொற்றால் பாதியில் நிறுத்தப்பட்டு, மீதமுள்ள போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இலங்கை கிரிக்கெட் வாரியம் உள்ளூர் தொடரான எல்பிஎல் தொடரின் இரண்டாவது சீசனை நடத்த முடிவு செய்தது. இதனை தொடர்ந்து எல்பிஎல் இரண்டாவது சீசன் வருகிற ஜூலை மாதம் 30ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி நிறைவு பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் மேலும் 2 வாரம் நீட்டிப்பு – அரசுக்கு கோரிக்கை!
தற்போது வரை இலங்கையில் கொரோனா நோய்பரவல் கட்டுக்குள் வராத காரணத்தினால் எல்பிஎல் தொடரில் தொடரில் பங்கேற்கும் அனைத்து வீரர்களும் கொரோனா பாதுகாப்பு வளையத்திற்குள் தங்க வைக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கொரோனா பரவலுக்கு மத்தியில் எல்பிஎல் தொடரின் முதல் சீசனை இலங்கை வாரியம் மிக சிறப்பாக நடத்தியதால் அனைத்து தரப்பினரும் இலங்கை வாரியத்திற்கு தங்களது பாராட்டை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.