குற்றால சாரல் திருவிழாவின் 2ஆம் நாள் மலர் கண்காட்சி – சுற்றுலா பயணிகள் உற்சாகம்!
தமிழகத்தில் மக்கள் அதிகம் வரும் சுற்றுலா தலமான குற்றால அருவியில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு குற்றாலம் சாரல் திருவிழா தொடங்கி இருக்கிறது. அதன் இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக ம்லர் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.
குற்றால சீசன் திருவிழா:
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கி இருப்பதால் தற்போது குற்றால சாரல் திருவிழா தொடங்கி இருக்கிறது. அதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றத்தில் குவிந்து இருக்கின்றனர். பிரதான அருவியான குற்றால மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் தற்போது தண்ணீர் ஆர்ப்பரித்து வருகிறது.
Exams Daily Mobile App Download
அதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகத்தில் இருக்கின்றனர். மேலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அனைத்து அருவிகளிலும் ஐந்தாவது நாளாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. அதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றமடைந்துள்ளனர். இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 5) குற்றால சாரல் விழா 3 ஆண்டுகளுக்குப் பிறகு கோலாகலமாக துவங்கியது. அதன் தொடர்ச்சியாக பிரதான அருவியான குற்றால மெயின் அருவி, ஐந்தருவி பகுதியில் வண்ண மின் விளக்குகள் அமைக்கப்பட்டு, அருவி நீர்வீழ்ச்சி பகுதியில் கலர் கலர் மின் விளக்குகளால் ஜொலிக்க விடப்பட்டுள்ளது.
திருப்பதி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு – பவித்ரோற்சவம் 8ம் தேதி முதல் தொடக்கம்!
மேலும் குற்றால சாரல் திருவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக மலர் கண்காட்சி தொடங்கியுள்ளது. அந்த வகையில் ஐந்தருவி சுற்றுச்சூழல் பூங்காவில் நாளை மறுநாள் வரை தோட்டக்கலைத்துறை சார்பில் மலர்கண்காட்சி நடக்கும் என கூறப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளுக்கு பின் குற்றாலத்தில் சாரல் திருவிழா தொடங்கி இருக்கும் நிலையில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து தங்களது விடுமுறை நாட்களை கொண்டாடி வருகின்றனர்.