2DG கொரோனா மருந்து பயன்பாடு – டிஆர்டிஓ விளக்கம்!!
கொரோனா சிகிச்சையில் 2DG மருந்து பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த மருந்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து டிஆர்டிஓ விளக்கமளித்துள்ளது. மின்னஞ்சல் பதிவின் மூலம் பெறலாம் எனவும் தெரிவித்துள்ளது.
2DG மருந்து:
உலகமெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் நோய்க்கு எதிராக பல நாடுகள் மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் உள்ளன. இந்தியாவில் கோவாக்சின், கோவிட்ஷீல்டு என்ற தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா சிகிசைக்கு ரெம்டெசிவிர் என்ற மருந்து பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது 2DG என்ற மருந்து அரசு அனுமதியுடன் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
அனைத்து கடைகளும் பிற்பகல் 2 மணி வரை திறக்க அனுமதி – ஊரடங்கு தளர்வுகள் அறிவிப்பு!!
டிஆர்டிஓ அமைப்பின் ஆய்வகமான இன்ஸ்ட்டியூட் ஆஃப் நியூக்ளியர் மெடிசன் அண்ட் அலைட் சயின்ஸ், டாக்டர் ரெட்டிஸ் மருந்து நிறுவனத்துடன் இணைந்து 2டிஜி கொரோனா மருந்தை தயாரித்துள்ளது. கடந்த மே 17ல் இந்த மருந்தை வெளியிட்டனர். முதலில் 10 ஆயிரம் பாக்கெட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த மருந்தை கொரோனா நோயாளிகளுக்கு இணை மருந்தாக கொடுக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. லேசான தொற்று முதல் அதிகமான தொற்று உள்ளவர்கள் வரை அனைவருக்கும் இந்த மருந்தை தொடர்ந்து 10 நாட்களுக்கு தொடர்ந்து வழங்கலாம்.
TN Job “FB Group” Join Now
மேலும் சர்க்கரை நோய், தீவிர இருதய நோய்கள், ஹெபாடிடிஸ் பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு போன்ற இணை நோய் கொண்டவர்களுக்கு இந்த மருந்தை வழங்கும் போது கூடுதல் கவனம் தேவை என நிபுணர்கள் கூறுகின்றனர். 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே இந்த மருந்தை பரிந்துரை செய்ய வேண்டும். கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு இந்த மருந்தைக் கொடுக்க கூடாது என டிஆர்டிஓ தெரிவித்துள்ளது. [email protected] இணையதளத்தில் பதிவு செய்து இதனை பெற்றுக் கொள்ளலாம் என டிஆர்டிஓ அறிவித்துள்ளது.