மாநில அரசுத்துறை ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) 28% உயர்வு – அரசு அறிவிப்பு!

0
மாநில அரசுத்துறை ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) 28% உயர்வு - அரசு அறிவிப்பு!
மாநில அரசுத்துறை ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) 28% உயர்வு - அரசு அறிவிப்பு!
மாநில அரசுத்துறை ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) 28% உயர்வு – அரசு அறிவிப்பு!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு அளிக்கப்பட்டதை தொடர்ந்து, மஹாராஷ்டிரா மாநிலத்தின் அரசுத்துறை பணியாளர்களுக்கும் 28% அகவிலைப்படி தொகை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

DA உயர்வு

கடந்த ஆண்டு நாடு முழுவதும் உருவான கொரோனா பேரலைக்கு மத்தியில் மத்திய அரசு ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்டு வந்த DA தொகையை மத்திய அமைச்சகம் நிறுத்தி வைத்தது. இந்த DA தொகையானது கிட்டத்தட்ட 3 தவணைகளுக்கு பின்னாக, கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் திரும்ப பெறப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) தொகையானது எப்போது உயர்த்தப்படும் என கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தது.

தீபாவளிக்கு பட்டாசு கடைகள் வைக்க திட்டமிடுவோர் கவனத்திற்கு – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

இதனிடையே குஜராத் அரசு, மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) தொகையை 11 சதவிகிதம் உயர்த்துவதாக நேற்று (செப்டம்பர் 6) அறிவித்தது. அதே போல தமிழகத்திலும், மாநில அரசு ஊழியர்களுக்கான DA தொகை உயர்த்தப்படும் என முதல்வர் முக ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 7) அறிவித்துள்ளார். இந்நிலையில் மஹாராஷ்டிரா மாநிலத்திலும், அரசு ஊழியர்களுக்கான DA தொகை 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த DA தொடர்பாக மஹாராஷ்டிரா முதல்வர் விஜய் ரூபானியுடன் கலந்துரையாடிய பிறகு, மாநில அரசு மற்றும் பஞ்சாயத்துகளில் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும், 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக DA தொகையை உயர்த்தி வழங்க நிதித்துறை முடிவு செய்துள்ளதாக துணை முதலமைச்சர் நிதின் படேல் தெரிவித்துள்ளார். இந்த DA உயர்வு ஜூலை 1, 2021 முதல் நடைமுறைக்கு வரும் மத்திய அரசு ஊழியர்களுக்கான நடவடிக்கைகளுக்கு ஏற்ப இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையில் கூடுதலாக 1,000 பேருந்துகள் இயக்கம் – விநாயகர் சதுர்த்தி பண்டிகை!

மேலும் உயர்த்தப்பட்ட DA தொகையானது செப்டம்பர் மாத சம்பளத்துடன் ஊழியர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. தவர DA நிலுவைத்தொகை அக்டோபர் மாதத்தில் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநில அரசுக்கு 378 கோடி ரூபாய் வருவாய் இழப்பீடு ஏற்படும். அதே நேரத்தில் 5.11 லட்சம் மாநில அரசு அதிகாரிகள் உட்பட 9.61 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் DA தொகையின் மூலம் பலனடைவார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!