அரசு ஊழியா்களுக்கு ஹாப்பி நியூஸ் – 270 நாட்கள் விடுமுறை அறிவிப்பு!
தமிழக அரசு பெண் ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய அறிவிப்பு ஒன்றை சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அடிப்படையில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் அரசு பெண் ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 270 நாட்களுக்கு விடுப்பு வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
270 நாட்கள் விடுமுறை:
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ந்தேதி முதல் தமிழக சட்டசபையில், துறை வாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். மேலும் இந்த கூட்டத்தொடர், மே 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது. கடந்த வியாழக்கிழமை சட்டப்பேரவையில் சமூக நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. மேலும் விவாத்திற்கு பதில் அளித்து அமைச்சர் கீதா ஜீவன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் பெருகி வரும் மூத்தக் குடிமக்களின் நலன், பாதுகாப்பு, சுகாதாரம், ஊட்டச்சத்து போன்ற சேவைகளை வழங்குவதற்கும் சமூக நல இயக்ககத்தில் தனி அலகு ஒன்று உருவாக்கப்படும் என தெரிவித்தார்.
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
இந்த வகையில் சமூகத்தில் நிலவும் பாலின பாகுபாடு பொருளாதார பின்னடைவு காரணமாக குழந்தைகள் விற்பனை, குழந்தை திருமணங்கள், குடும்பத்தில் கடன் சுமை காரணமாக தம்பதியினா் தற்கொலை, குழந்தைகளையும் சோ்த்து கொலை செய்தல் போன்ற குற்றங்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இத்தகைய குற்றங்களை தவிர்ப்பதற்கு 10 மாநகராட்சிகளில் ஒரு சேவை மையத்திற்கு ரூ.1.10 கோடி வீதம் 10 ஒருங்கிணைந்த சேவை மையங்கள் ரூ.11 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். இதை தொடர்ந்து மகப்பேறு மருத்துவமனைகள் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட மையங்களில் குழந்தைகளின் முதல் 1,000 நாட்கள் குறித்த விழிப்புணா்வு ரூ.1.74 கோடி செலவினத்தில் ஏற்படுத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
ExamsDaily Mobile App Download
தமிழக அரசில் பணியாற்றும் திருமணமான பெண் ஊழியர்களுக்கு, இரண்டு குழந்தைகள் வரையில் அவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது என்பது குறிப்பித்தக்கது. தற்போதைய சூழலில் வாடகைத் தாய் மூலம் குழந்தைகள் பெறுவது அதிகரித்து வருகிறது, எனவே வாடகைத் தாய் மூலம் குழந்தைகள் பெறும் அரசுப் பெண் பணியாளா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு பச்சிளம் குழந்தைகளை மிகுந்த கவனத்துடன் பராமரிப்பதுடன் அவா்களின் உடனடி தேவைகளை நிறைவேற்றுவதற்காக 270 நாட்கள் குழந்தை பராமரிப்பு விடுப்பு வழங்கப்படும் என உறுதி அளித்துள்ளார். இந்த அறிவிப்பு அரசு பெண் ஊழியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.