27 வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு பிரவாசி பாரதிய சம்மான் விருது – ஜனவரி 8 முதல் 10 வரை வழங்க முடிவு!!
வெளிநாடுகளில் வாழும் புலம் பெயர்ந்த இந்தியர்களை கெளரவிக்கும் விதமாக பிரவாசி பாரதிய சம்மான் விருதுகள் வழங்குவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான கூடுதலான தகவல்களை பார்ப்போம்.
பிரவாசி பாரதிய சம்மான்
இந்தியர்கள் தற்போது இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், நியூஸிலாந்து, ஜப்பான் போன்ற அதிக வருமானம் கொண்ட நாடுகளில் விரிவடைந்துள்ள வேலைவாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்கின்றனர். இது போன்ற வெளிநாடுகளில் வாழும் புலம் பெயர்ந்த இந்தியர்களை சிறப்பு செய்யும் வகையில் இந்திய அரசு விருதுகள் வழங்கி அவர்களை கெளரவப்படுத்தி வருகிறது.
Follow our Instagram for more Latest Updates
அந்த வகையில், ஒவ்வொரு ஆண்டும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRIs), இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் (PIOs) அல்லது இந்தியர்களால் நிறுவப்பட்டு நடத்தப்படும் நிறுவனம்/அமைப்பு ஆகியவற்றிக்கு பிரவாசி பாரதிய சம்மான் விருது வழங்கப்படுகிறது. இந்த விருதானது வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த கவுரவமாக விளங்குகிறது.
தமிழக பள்ளி மாணவர்களுக்கு ரூ.12,000 வழங்கும் கல்வி உதவித்தொகை திட்டம் – விண்ணப்பங்கள் வரவேற்பு!
அந்த வகையில், இந்த ஆண்டிற்கான பிரவாசி பாரதிய சம்மான் விருதிற்கு 27 வெளிநாட்டு இந்தியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் வருகிற ஜனவரி 8 முதல் 10ம் தேதி வரை மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூர் நகரில் நடைபெறும் நிகழ்ச்சியில் வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருத்தாளர்கள் குடியரசுத் துணைத் தலைவர், வெளியுறவு அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கொண்ட குழுவால் தேர்வு செய்யப்படுகிறார்கள்.