அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? ஜூன் 27ல் வேலை நிறுத்தப் போராட்டம்!
மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் தங்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வருகிற ஜூன் 27ம் தேதி அன்று நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
போராட்டம்
மத்திய அரசு கடந்த 2004ம் ஆண்டு தேசிய பென்ஷன் திட்டத்தின் கீழ் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு ஆரம்ப காலத்தில் இருந்து ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏனெனில் இதில் பழைய ஓய்வூதிய திட்டத்தில் கிடைக்கும் எந்தவொரு பலனும் புதிய திட்டத்தில் கிடைப்பதில்லை என்று வருத்தம் தெரிவிக்கின்றனர். அதாவது பழைய ஓய்வூதிய திட்டத்தில் ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படாமல் ஓய்வூதிய வழங்கப்படுகிறது. ஆனால் இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் சம்பளத்தில் 10% பிடித்தம் செய்யப்படுகிறது. அத்துடன் 14% பங்கு அரசால் எடுத்து கொள்ளப்படுகிறது.
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்!
மேலும் ஓய்வூதியத்தின் ஒரு பகுதி பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டு பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப ஓய்வூதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த திட்டம் முதிர்வு காலத்தில் நிலையான வருவாயை பெற முடியாது. அதனால் தங்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். இது தொடர்பாக அரசு எந்தவொரு நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளாததால் தற்போது பல்வேறு இடங்களில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Exams Daily Mobile App Download
அதன் தொடர்ச்சியாக வருகிற ஜூன் 27ம் தேதி அன்று பொதுத்துறை வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். மேலும் இதில் மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கும் திட்டம், வங்கிகளில் வாரத்தில் 5 நாட்களுக்கு மட்டுமே வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த உள்ளனர். மேலும் இந்த போராட்டத்தில் நாடு முழுவதும் 7 லட்சத்துக்கு மேற்பட்ட வங்கி ஊழியர்கள் கலந்து கொள்ள உள்ளதாக அனைத்திந்திய வங்கி அலுவலர்கள் கூட்டமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.