விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு 261 சிறப்பு ரயில்கள் – ஒன்றிய ரயில்வே அறிவிப்பு!
இந்தியாவில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இது குறித்த விவரங்களை www.enquiry.indianrail.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சிறப்பு ரயில்கள்:
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட்டத்தை தொடர்ந்து விநாயகர் சிலைகள் விற்பனை அதிகரித்து வருகிறது. கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் வரும் 15 ஆம் தேதி வரை அனைத்து மத வழிபாட்டு நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலை நிறுவுவதற்கும், சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கும், நீர்நிலைகளில் சிலைகளை கரைப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அக்.4ம் தேதி மாநிலங்களவை தேர்தல் – தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
இந்நிலையில் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு ஏதுவாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து 261 சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக ஒன்றிய ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. எனவே ஒன்றிய ரயில்வேயில் 201 சிறப்பு ரயில்களும், மேற்கு ரயில்வேயில் 42 சிறப்பு ரயில்களும், கொங்கன் வழித்தடத்தில் 18 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 15% கூடுதல் மாணவர் சேர்க்கை – உயர்கல்வித்துறை அமைச்சர்!
கடத்த ஆகஸ்ட் மாதம் முதல் இந்த சிறப்பு ரயில்கள் செப்டம்பர் 20ம் தேதி வரை இயக்கப்படும் என கூறப்படுகிறது. மேலும் ரயில்கள் புறப்படும் இடம், அதற்கான வழித்தடங்கள், இயக்கப்படும் நேரம் குறித்த அட்டவணையை www.enquiry.indianrail.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். முன்பதிவு செய்த பயணிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் பயணம் செய்யவிருக்கும் பயணிகள் கொரோனா நெறிமுறைகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.