தமிழகத்தில் காலியாகிய 25,000 பணியிடங்கள் – அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒய்வு!

0
தமிழகத்தில் காலியாகிய 25,000 பணியிடங்கள் - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒய்வு!
தமிழகத்தில் காலியாகிய 25,000 பணியிடங்கள் - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒய்வு!
தமிழகத்தில் காலியாகிய 25,000 பணியிடங்கள் – அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒய்வு!

தமிழகத்தில், தற்போதைய திமுக அரசு அரசு ஊழியர்களின் ஒய்வு பெறும் வயதை 62 ஆக உயர்த்த பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்நிலையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட சுமார் 25,000 பேர் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார்கள். இந்த வகையில் தமிழக அரசு துறையில் மேலும் 25000 பணியிடங்கள் காலியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசுத்துறை காலிப்பணியிடங்கள்:

தமிழக அரசில் ஆசிரியர்கள், அரசு சார்ந்த பொதுத்துறை ஊழியர்கள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களின் ஊழியர்கள் என 12 லட்சத்துக்கும் அதிகமான அரசு ஊழியர்கள் பணியில் உள்ளனர். இவர்களுக்கான ஓய்வு பெறும் வயது 58 ஆக இருந்தது. ஆனால், கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா காரணமாக அதிகமான நிதி நெருக்கடி ஏற்பட்டது. இந்த நிலையில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 59 ஆக உயர்த்தி அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். தொடர்ந்து, கடந்த 2021 பிப்ரவரி மாதம் கொரோனா 2வது அலை அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. அப்போதும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு பணியாளர்களின் ஓய்வு பெறும் வயதினை 60 ஆக உயர்த்தப்படும் என சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்தார்.

Exams Daily Mobile App Download

இது தொடர்பான அரசாணையில், இந்த அறிவிப்பானது அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், அரசியலமைப்பு மற்றும் சட்டரீதியான அமைப்புகள், அரசு நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், வாரியங்கள், ஆணையங்கள், சங்கங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்துப் பணியாளர்கள் அனைவருக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டிருந்தது .அந்த உத்தரவானது தற்போது அரசுப் பணியில் இருக்கும் அனைவருக்கும் மற்றும் 2021 மே 31ஆம் தேதி பணியில் இருந்து ஓய்வு பெறும் பணியாளர்களுக்கும் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

Degree முடித்தவர்களுக்கு வங்கியில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு…!

இந்நிலையில் தற்போதைய தமிழக அரசும் நிதி நெருக்கடியை காரணம் காட்டி அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60லிருந்து 62ஆக உயர்த்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த சமயத்தில் முந்தைய அதிமுக ஆட்சியில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60-வது மாற்றப்பட்ட நிலையில் 25,000 பேர் இன்றுடன் பணி ஓய்வு பெறுகின்றனர். ஏற்கனவே மாநில அரசில் 1.5 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் மேலும் 25,000 இடங்கள் உருவாகியுள்ளன. அதாவது தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சுமார் 25,000 பேர் இன்று பணி ஓய்வு பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!