Wipro நிறுவனத்தில் 25,000 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் – முழு விவரம் இதோ!

0
Wipro நிறுவனத்தில் 25,000 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் - முழு விவரம் இதோ!
Wipro நிறுவனத்தில் 25,000 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் - முழு விவரம் இதோ!
Wipro நிறுவனத்தில் 25,000 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் – முழு விவரம் இதோ!

இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ பிடெக் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களில் சுமார் 25,000 பேருக்கு புதிய வேலை வாய்ப்புகளை அளிக்க திட்டமிட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

வேலை வாய்ப்பு

நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்றின் நிலைமைகள் மேம்பட்டு வருவதால் பல்வேறு துறைகளை சார்ந்த நிறுவனங்கள் வேலை மற்றும் ஆட்சேர்ப்பு வேகத்தை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் இந்தியாவின் சில முன்னணி மென்பொருள் நிறுவனங்களும் புதிய பணியமர்த்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. இந்த நிலையில்தான் இந்தியாவின் சிறந்த தொழில்நுட்ப (IT ) நிறுவனமான விப்ரோ, அடுத்த ஆண்டில் பல ஆயிரக்கணக்கான புதியவர்களை சேர்க்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Post Office சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – வட்டி சான்றிதழ் பெறலாம்! அஞ்சல் துறை அறிவிப்பு!

அந்த வகையில் வரும் 2022 ஆம் ஆண்டுக்குள் 25,000க்கும் மேற்பட்ட பட்டதாரி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க இருப்பதாக இந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தகவல்கள் குறிப்பிடுகிறது. அந்த வகையில் 2022ல் பட்டப்படிப்பை முடிக்கும் சுமார் 25,000 க்கும் மேற்பட்ட மாணவர்களை வேலைக்கு அமர்த்த இந்நிறுவனம் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த செய்தியை விப்ரோ தலைவர் சவுரப் கோவில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்வில் தெரியப்படுத்தினார்.

இது குறித்து அவர் கூறும் போது, ‘திறமையான விண்ணப்பதாரர்களை பணியமர்த்துவதில் விப்ரோ நிறுவனம் உறுதியாக உள்ளது. இதன் ஒரு பகுதியாக, பல்வேறு திட்டங்களுக்கான ஆட்சேர்ப்பு செயல்முறையை நாங்கள் துரிதப்படுத்துகிறோம். விப்ரோவில் தற்போது இரண்டு லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் உள்ளனர். கடந்த ஆண்டு, இந்நிறுவனம் 17,000 புதியவர்களை வேலைக்கு அமர்த்தியது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழக அரசு சார்பில் பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000 வைப்புத்தொகை – விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரம் இதோ!

இது தவிர முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங், பட்டதாரி மாணவர்களுக்கு முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் ஐஐடி மற்றும் பிற பொறியியல் கல்லூரிகளில் இருந்து சுமார் 1,000 பொறியாளர்களை பணியமர்த்துவதாகவும் இதில் 260 பேர் ஐஐடியில் இருந்து வருவார்கள் என்று சாம்சங் நிறுவனத்தின் மனிதவளப் பிரிவுத் தலைவர் சமீர் வாதவன் தெரிவித்துள்ளார். தவிர NIT, IIIT மற்றும் Bits Pilani போன்றவற்றிலிருந்து மீதமுள்ளவர்களை வேலைக்கு அமர்த்தவும் Samsung நிறுவனம் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!