Post Office செல்வமகள் சேமிப்பு திட்டம் – குறைந்தபட்ச முதலீடு ரூ.250! சிறந்த வட்டி விகிதம்!
அஞ்சல சேமிப்பு திட்டங்களில் மிகவும் பிரபலமான திட்டங்களில் பெண் குழந்தைகளுக்கான செல்வ மகள் சேமிப்பு திட்டம். இந்த திட்டத்தின் நன்மைகள் குறித்து இப்பதிவில் தெரிந்துகொள்வோம்.
செல்வ மகள் சேமிப்பு திட்டம்:
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் வங்கிகளுக்கு இணையாக அஞ்சலக சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஏனெனில் வங்கியை விட சிறந்த லாபத்தை அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் கொடுக்கிறது. சேமிப்பு திட்டங்களில் அதிக வட்டி தொகை கிடைப்பதால் முதிர்வு காலத்தில் சேமிப்புடன் சேர்த்து கூடுதல் வட்டி தொகை கிடைக்கிறது. இந்த வட்டி விகிதம் ஒவ்வொரு திட்டத்திற்கு ஏற்ப மாறுபடுகிறது. ரிஸ்க் இல்லாமல் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு அஞ்சலக திட்டங்கள் நல்ல பலனை அளிக்கிறது. அஞ்சலத்தில் பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டமும் உள்ளது.
Reliance Jio வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட் – 2 நாட்களுக்கு இலவச சேவை!
அது தான் சுகன்யா சம்ரிதி யோஜனா எனப்படும் செல்வமகள் சேமிப்பு திட்டம். கடந்த 2015ம் ஆண்டு மத்திய அரசால் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் கணக்கு தொடங்கலாம். இந்தத் திட்டத்தில் பெண் குழந்தைகளைச் சேர்க்க வயது சான்றாக பிறப்புச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். குழந்தையின் பெற்றோரோ அல்லது பாதுகாவலரோ சேமிப்பு கணக்கை தொடங்கலாம். இதில் நீங்கள் செலுத்தும் தொகைக்கு ஆண்டுக்கு 7.6 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. மற்ற சேமிப்பு திட்டங்களை விட இந்த திட்டத்தில் வட்டி விகிதம் கூடுதலாகும்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டன் ஆகும் ஹர்திக் பாண்டியா? ரசிகர்கள் அதிர்ச்சி!
குறைந்த பட்சம் 250 முதல் அதிகபட்சம் ரூ.1000 வரை சேமிக்கலாம். 15 ஆண்டுகள் மட்டுமே இந்த திட்டத்தில் டெபாசிட் செய்ய முடியும். குழந்தையின் 10 வயது தொடங்கும் போது இக்கணக்கை தொடங்கி 21 வயது வரை சேமிக்கலாம். 21 வயதுக்கு பிறகு குழந்தையின் திருமணம் மற்றும் உயர் கல்விக்காக இந்த தொகையை பெறலாம். 15 ஆண்டுகளில் நீங்கள் மாதந்தோறும் தொகை செலுத்தாவிட்டால் அபராத தொகை செலுத்தினால் மட்டுமே கணக்கு புதுப்பிக்க முடியும்.