தமிழக அரசு கல்லூரிகளில் 25% கூடுதல் மாணவர் சேர்க்கை – அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் 2022 – 2023 ம் கல்வியாண்டில் அரசு மற்றும் சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது. இதையடுத்து கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு உயர்கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது. இது குறித்த அரசாணையும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
கூடுதல் மாணவர் சேர்க்கை:
தமிழகத்தில் உள்ள 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை ஜூன் 20 முதல் ஜூலை 27-ம் தேதி வரை நடைபெற்றது. மொத்தமுள்ள 4 லட்சத்து 7,045 மாணவர்கள் சேர்க்கைக்கு பதிவு செய்தனர். இதில் முழுமையாக விண்ணப்பங்களை முழுமையாக பூர்த்தி செய்து, கட்டணம் செலுத்தியவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு கல்லூரி அளவிலான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து கலந்தாய்வு ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெற தொடங்கியது.
இந்த ஆண்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் விண்ணப்பித்ததை அடுத்து கூடுதல் இடங்கள் வழங்க கோரிக்கை எழுந்தது. அரசு மற்றும் சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு தற்போது உயர்கல்வி துறை அனுமதி வழங்கியுள்ளது. கலை பாடப்பிரிவில் 25% கூடுதலாகவும், அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு ஆய்வக வசதிக்கு ஏற்ப 25% கூடுதலாகவும் மாணவர்களை சேர்த்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு கல்லூரிகளை தொடர்ந்து அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் 15 சதவீதமும் கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
ராதிகாவை திருமணம் செய்து கொள்ள போகும் கோபி – “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்து வருபவை!
அதனை தொடர்ந்து சுயநிதி கல்லூரிகளில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் 10 சதவீத இடம் அளிக்கப்பட்டுள்ளது. கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு பல்கலைக்கழகங்களின் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்றும் கூடுதலாக சேர்க்கப்பட்ட மாணவர்களின் விவரங்கள் குறித்து கல்லூரி வாரியாக அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்க வேண்டும் என்று உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்