தமிழக அரசு பணியாளர்களுக்கு 25% தீபாவளி போனஸ் – முக்கிய கோரிக்கை!
தமிழகத்தின் பொதுத்துறை நிறுவங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 25% தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என்று த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
தீபாவளி போனஸ் :
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் துறையில் பணி புரியும் ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போனஸ் வழங்கப்படும். பண்டிகை தினத்தை முன்னிட்டு பணியாளர்கள் தங்கள் குடும்பத்துடன் பண்டிகையை சிறப்பாக கொண்டாடவும், விழா காலத்தில் தேவையான பொருட்களை வாங்கவும் இந்த போனஸ் தொகை பேருதவியாக உள்ளது. இந்த வருடம் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகம் இருப்பதால் தொழில்கள் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஊதியம் தர முடியாததால் பணியாளர்களை வேலையில் இருந்து நீக்க பணிகளை முதலாளிகள் மேற்கொண்டனர்.
8, 11 ஆம் வகுப்புகளுக்கு அக்.21 முதல் பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!
இந்த நேரத்தில் பண்டிகை வரவுள்ளதால் இந்த தீபாவளிக்கு போனஸ் கிடைக்குமா என்ற அச்சம் பணியாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த நிலையில் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீபாவளி போனஸ் தொகையை அதிகரிக்க கோரிக்கை எழுந்துள்ளது. கடந்த இரண்டாண்டு காலமாக கொரோனாவால் அரசு போக்குவரத்துக்கழகம் மின்சார வாரியம், குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், சர்க்கரை ஆலைகள், தேயிலை வாரியம், கதர் வாரியம் ஆகிய துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக அரசின் வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை – பெறுவது எப்படி?
அதனால் இவர்களுக்கு தமிழக அரசு ஆண்டுதோறும் வழங்கும் தீபாவளி பண்டிகை போனசை இந்த வருடம் தீபாவளி பண்டிகை கால போனசாக மொத்தம் 25 சதவீதம் கொடுக்க முன்வர வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதனையடுத்து இந்த வருடம் தீபாவளி போனஸ் அதிகமாக வரும் என்று ஊழியர்கள் எதிர்பார்கின்றனர்.