தொலைதூரக் கல்வியில் 25 புதிய படிப்புகள் – யுஜிசி ஒப்புதல்!
மாணவர்களுக்கு கல்வி வழங்குவதில் கல்லூரிகளை போலவே தொலைதூர கல்வியும் முக்கிய பங்காற்றி வருகிறது. தற்போது தொலைதூரக் கல்வியில் 25 புதிய படிப்புகளுக்கு யுஜிசி ஒப்புதல் வழங்கியுள்ளது.
யுஜிசி ஒப்புதல்:
தற்போது கொரோனா பெருந்தொற்று காரணமாக ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு நேரடி முறையில் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அரசு அறிவித்தது. உயர்கல்வி வகுப்பு முடித்த மாணவர்கள் அனைவராலும் கல்லூரியில் சென்று படிக்க இயலாது. எனவே மாணவர்கள் மாலை நேர கல்லூரி மற்றும் தொலைதூர கல்லூரி மூலம் தங்கள் கல்வியை தொடர்ந்து வருகின்றனர்.
தமிழகத்தில் பஞ்சு மீதான 1% சந்தை நுழைவு வரி ரத்து – முதல்வர் அறிவிப்பு!
முன்னணி பல்கலைக்கழகங்கள் தொலைதூர கல்வி முறை மூலம் மாணவர்களுக்கு கல்வியை வழங்கி வருகின்றன. பல்கலைக்கழக மானிய குழுவிடம் முறையான அனுமதி பெறுவதன் மூலம் மட்டுமே நாட்டில் உள்ள அனைத்து வகையான பல்கலைக்கழகங்களும் புதிய பட்டப் படிப்புகளை தொடங்க முடியும். கடந்த மார்ச் மாதம் யுஜிசி பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கு தொலைதூர படிப்புகளை தொடங்க அனுமதி வழங்கியுள்ளது.
ஊரடங்கிற்கு முன் சீசன் டிக்கெட் எடுத்த ரயில் பயணிகள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!
அதனை தொடர்ந்து தொலைதூரக் கல்வி முறைக்கு நாடு முழுவதும் கூடுதலாக 11 பல்கலைக்கழகங்களில் 74 படிப்புகளுக்கு யுஜிசி ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 5 இளநிலை, 5 முதுநிலை என 10 படிப்புகளுக்கும், சென்னை பல்கலைக்கழகத்தில் ஒரு இளநிலை, 2 முதுநிலை என 3 படிப்புகளுக்கும், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் 8 இளநிலை, 4 முதுநிலை என 12 படிப்புகளுக்கும் யுஜிசி தற்போது அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்த விவரங்களை https://www.ugc.ac.in/ எனும் இணைய முகவரியின் மூலம் அறிந்து கொள்ளலாம்.