தமிழகத்தில் 25 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – தலைமைச் செயலாளர் உத்தரவு!
தமிழகத்தில் இன்று 25 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தலைமை செயலாளர் வெ.இறையன்பு அவர்கள் வெளியிட்டுள்ளார்.
பணியிட மாற்றம்:
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்ட முதல் நாளில் இருந்தே அரசுத்துறைகளில் பல மாற்றங்களை செய்து வருகிறார். ஒவ்வொரு துறைகளிலும் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். சில துறை அதிகாரிகளுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்படுகிறது. கொரோனா தடுப்பு பணிகளுக்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு கலந்தாலோசனைகள் மூலம் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு வருகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறைகள் – கொரோனா தொற்று எதிரொலி!
அதன் தொடர்ச்சியாக அரசு அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று மேலும் 25 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் வெ.இறையன்பு அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி
- மதுரை மாநகராட்சி ஆணையராக கே.பி.கார்த்திகேயன் நியமனம்
- சேலம் மாநகராட்சி ஆணையராக கிறிஸ்துராஜ் நியமனம்
- திருப்பூர் மாநகராட்சி ஆணையராக கிராந்திகுமார் நியமனம்
- நெல்லை மாநகராட்சி ஆணையராக விஷ்ணு சந்திரன் நியமனம்
- கோவை மாநகராட்சி ஆணையராக ராஜகோபால் நியமனம் உள்ளிட்ட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.